Mayiladuthurai

News April 1, 2025

அங்கன்வாடி பணிக்கு ரெடியா?

image

அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <>இங்கு கிளிக் <<>>செய்து அறியலாம். பிறர் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..

News April 1, 2025

தைக்கால் கோரைப் பாய் குடோனில் தீ விபத்து

image

தைக்கால் மெயின் ரோட்டில் உள்ள கோரைப் பாய் தயாரிப்பு மிஷின் மற்றும் கோரை அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில், நேற்று நண்பகல் திடீரென தீ பற்றி எரிந்தது. இதைஅறிந்த அப்பகுதியினர் தீயை அணைக்க முயன்று இயலாததால், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் கொள்ளிடம் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

News March 31, 2025

மயிலை மக்களே ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

News March 30, 2025

தமிழக ஆளுநருக்கு மயிலாடுதுறை ஆட்சியர் வரவேற்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பேரழந்தூர் கிராமத்தில் இந்திய அரசு கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் கம்பராமாயணம் விழா துவக்க விழாவிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆ.என்.ரவிக்கு மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்பு அளித்தார்.

News March 30, 2025

மயிலாடுதுறை: மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

image

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்

News March 30, 2025

வருடத்திற்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும் கிணறு?

image

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகத்திற்கு மார்க்கண்டேயர் வேண்டுதலுக்கிணங்க காசி கங்கை நீர் கிணற்றில் தோன்றியதாக வரலாறு. கிணறு தோன்றிய பங்குனி மாத அஸ்வினி நட்சத்திரத்தில் அசுபதி தீர்த்தவாரி நடைபெறும். காசிக்கு கங்கா தீர்த்தத்திற்கு நிகராக போற்றப்படும் இந்த கிணற்றில் புனித நீராட ஒரு நாள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அத்தகு சிறப்புமிக்க அசுபதி திருவிழா நாளை திங்கட்கிழமை(மார்ச்31) நடைபெற உள்ளது

News March 30, 2025

மயிலையில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்

image

> குத்தாலம் உத்தவேதீஸ்வரர் கோயில் > மாயூரநாதர் கோயில் >தேரழுந்தூர் தேவாதிராஜன் கோயில் >திருமணஞ்சரி உத்வாகநாதர் கோயில் >திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் >வதாரண்யேஸ்வரர் கோயில் >வான்முட்டி பெருமாள் கோயில். உங்களுக்கு தெரிந்த கோயில்களை கமெண்ட் பண்ணுங்க. இன்று அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வாருங்கள். மற்றவர்கள் அருள் பெற SHARE செய்து உதவுங்கள்.

News March 30, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 589 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 6,344 மாணவர்களும் 6,281 மாணவிகளும் என மொத்தம் 12,625 மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 52 தேர்வு மையங்களில் நடைபெற்ற பொது தேர்வில் நேற்று 399 மாணவர்களும் 190 மாணவிகள் என முத்தம் 589 தேர்வு எழுத வரவில்லை. 12,036 மாணவ மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 30, 2025

மயிலாடுதுறையில் நடப்பாண்டில் 33 ரவுடிகள் கைது 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் தற்போது வரை ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 33 ரவுடிகள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்த 5 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News March 29, 2025

நாளை வருகிறார் தமிழ்நாடு கவர்னர்

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் கிராமத்தில் கவிச்சக்கரவர்த்தி அவர்களின் கம்பர் கோட்டம் கம்பர்மேடு கம்பர் மணி மண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. இந்த நிலையில் நாளை மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு முப்பது மணி அளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  வருகை தந்து பார்வையிட உள்ளார்கள்.

error: Content is protected !!