India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு கீழே அமைந்துள்ளது தாயுமானவ சுவாமி கோயில். தாயுமானவரை மனம் உருகி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்றும் கர்ப்பிணி பெண்கள் வாழைத்தார் வாங்கி தொட்டில் கட்டி வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என கூறப்படுகிறது. இங்கு சித்திரை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கான மருந்து வழங்கப்படுவது விசேஷமாகும்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் , மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். நிகழ்வில் அரசு அதிகாரிகள் பலர் உடன் பங்கேற்றனர்.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில்(BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கு <
திருவாரூர் திருமஞ்சன வீதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் (74) என்பவர் அவரது மனைவி ராணியை (59) வழியனுப்ப மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு நேற்று வந்துள்ளார். ரயிலில் ஏறி மனைவியை அமர வைத்தபோது ரயில் புறப்பட்டதால், கீழே இறங்கிய போது நிலை தடுமாறி தண்டாவாளத்துக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கினார். உடனே பயணிகள் ரயிலை நிறுத்தி, அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சீர்காழியில் வாசன் கண் மருத்துவமனை மற்றும் டாக்டர் பாலாஜி மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் நாளை (பிப்.17) புழுக்காப்பேட்டை தெருவில் உள்ள பாலாஜி அவசர மற்றும் மருத்துவ உதவி மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு கண் விழித்திரை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் விற்ற வியாபாரிகளை தட்டிக் கேட்கப்பட்டு அதற்காக கல்லூரி மாணவர் உட்பட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் என தவறாக பரப்பப்படும் எந்தவித வதந்திகளை நம்பவும், பரப்பவும் வேண்டாம் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை அருகே சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு அரசும், காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும். இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மயிலாடுதுறையில் நடந்த இரட்டைக் கொலை குற்றவாளிகளை போலீஸார் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் கொலை, கொள்ளை நடக்கத்தான் செய்கிறது. ஆனால், அதனை கடந்து போக முடியாது. 24 மணி நேரமும் அரசு கண்காணித்து வருகிறது. இருப்பினும் இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருச்சேறை கிராமத்தில் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ருணவிமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கட்கிழமை வழிபட்டால் தீராத கடன் பிரச்சனையும், முற்பிறவியில் செய்த பாவங்களும் தீரும் என்பது ஐதீகம். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரிய ஒளி இங்குள்ள சுவாமி அம்பாள் மீது நேரடியாக விழுவது தனி சிறப்பு.
Sorry, no posts matched your criteria.