India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்டமானது 2020ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 28-ம் தேதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்பட்டது. அதன் பின்பு மாவட்ட ஆட்சியர்கள் பணியமர்த்தப்பட்டன.
1. இரா.லலிதா
2. முருகதாஸ் (03.02.2023 – 05.02.2023)
3. ஏ.பி .மகாபாரதி (05.02.2023 – 28.02.2025)
4. ஹச்.எஸ்.ஸ்ரீகாந்த் (01.03.2025 – இந்நாள் வரை)
இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பகுதியை சேர்ந்த 34 வயதான கட்டிடத் தொழிலாளி, அவரது மகளான 9 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டை பெறுவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும். எனவே, மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

சீர்காழியில் இருந்து கொள்ளிடம் செல்லும் புறவழிச் சாலையில் சாமியம் பகுதியில் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த வேன், சீர்காழியிலிருந்து இரண்டு மிக்சர் மிஷின்களுடன் சென்ற டிராக்டர் பின்னால் மோதியது. இதில், வேன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத டிரைவர் முகமது யாசின்(34), வேனில் இருந்து குதித்தபோது வேனின் முன் சக்கரம் ஏறி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், திருப்புன்கூர் கிரமத்தில் சிவலோகநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் உள்ள சிவலோநாநதரை வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள், தீராத நோய்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க…

மயிலாடுதுறை மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.