Mayiladuthurai

News January 13, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.12) இரவு 10 முதல் இன்று (ஜன.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 12, 2026

மயிலாடுதுறை அருகே 1000 ஆண்டு பழமையான கோயில்!

image

மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரியில் அமைந்துள்ள வாகீஸ்வரர் கோயில் தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக வாகீசுவரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தவத்தால் எதனையும் அடையலாம் என பிரம்மா கருத்து கூற சரஸ்வதி இங்கு கோயில் கொண்டுள்ள சிவன் முன்பாக தவம் இருந்து தன் குறை நீங்கப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க.

News January 12, 2026

மயிலாடுதுறை: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறை மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு <>இங்கு க்ளிக் செய்து<<>> ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.!

News January 12, 2026

மயிலாடுதுறை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

மயிலாடுதுறை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 12, 2026

மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில், இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை மாவட்டத்தில், அதிகபட்சமாக சீர்காழியில் 10.20 மிமீ மழை பதிவாகியுள்ளது. தரங்கம்பாடியில் 9 மிமீ, செம்பனார்கோவிலில் 8 மிமீ, மணல்மேட்டில் 5 மிமீ, கொள்ளிடத்தில் 6.80 மிமீ, மயிலாடுதுறையில் 1 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 12, 2026

மயிலாடுதுறை: 10th போதும்-ரூ.78,800 சம்பளத்தில் வேலை!

image

NCERT தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 176
3. வயது: குறைந்தது 27 – அதிகபட்சம் 50
4. சம்பளம்: ரூ..19,900 – ரூ.78,800
5. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 16.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 12, 2026

மயிலாடுதுறை: 7 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

image

மயிலாடுதுறை காவல் சரகத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று(ஜன.11) சட்டவிரோத குட்கா பொருட்கள் விற்பனை குறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூரை சேர்ந்த ராகுல் ஹமீது (51) என்பவர், சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்து. மேலும் அவரை கைது செய்து, சுமார் 7 கி குட்கா பொருட்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

மயிலாடுதுறை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது t<>nagrisnet.tn.g<<>>ov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 12, 2026

மயிலாடுதுறை: வாகனம் மோதி வாலிபர் பலி

image

செம்பனார்கோயில், பரசலூரை சேர்ந்தவர் திவாகீஷ் (30), இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் குழந்தை உள்ளது. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பரசலூர் அருகே நேற்று சென்று கொண்டிருந்தபோது, மாதவன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பலத்த காயமடைந்த திவாகீஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செம்பனார்கோயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 12, 2026

மயிலாடுதுறை: வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 11 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 46 2 சக்கர வாகனங்கள் என மொத்தம் 58 வாகனங்கள் அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு, பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில், வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறுகிறது. விபரங்களுக்கு 9626169492 தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!