India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை அணுகலாம்.
சீா்காழி அருகே துக்க நிகழ்வில் பங்கேற்க 4 1/2 வயது பெண் குழந்தையுடன் பெற்றோா் வந்திருந்தனா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அந்த குழந்தையை அப்பகுதியைச் சோ்ந்த சிறுமியின் தாய் மாமன் தமிழ்வாணன்(43) என்பவா் தனியாக அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா். பெற்றோா் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் செல்வி விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் தமிழ்வாணனை கைது செய்தாா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 274 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகைக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சிங்காரவேலவர் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி இவரது மனைவி ஜானகி தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இன்று பேட்டரி சார்ஜ் செய்தார். அப்போது திடீரென பேட்டரி வெடித்து சிதறியது. இதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கடல் சார்ந்த படகு எஞ்சின், டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. பொறையார் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜிகே.மணி அவர்களின் பேரனின் திருமண வரவேற்பு விழாவானது. இன்று திருக்கடையூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.அதற்கு கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ராஜ்குமார் வருகை தந்து வாழ்த்தினார்கள்.
மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியராக ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் நேரில் சென்று ஆட்சியருக்கு பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கலந்துரையாடிய நிலையில் நினைவு பரிசாக ஆட்சியருக்கு புத்தகம் வழங்கினார்.
பார்வதி தேவி மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால், இப்பகுதி மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டு வரை மயூரபுரம் என்றும், பின்பு மாயவரம் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊர் 1982இல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது மயிலாடுதுறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. SHARE NOW
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தரங்கம்பாடி தாலுகா பாலூர் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டிக்கு தனக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என கூறி விண்ணப்பம் செய்ய சென்று இருந்தார். அப்பொழுது அரசு அதிகாரி பாபு என்பவர் அவரை அழைத்து இ சேவை மையத்திற்கு சென்று ஆவணத்தை வைத்து பார்க்கும் பொழுது வங்கி கணக்கில் இருப்பு இருந்தது தெரிந்தது. அதனை ஆவணத்தின் அடிப்படையில் பெற்று வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.