Mayiladuthurai

News April 9, 2025

மயிலாடுதுறை: ரூ.50 லட்சம் வரை மானியம் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும், செம்மறி ஆடு, வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

மயிலாடுதுறை: ரயில் வழித்தடத்தில் மாற்றம்

image

செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ரயிலானது, நாளை விருதுநகரிலிருந்து மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மறுமார்க்கமாக மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் அன்றைய தினம் வழக்கமான பாதையில் மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News April 9, 2025

டிஜிட்டல் திருமண அழைப்பிதழ் மோசடி, காவல்துறை எச்சரிக்கை

image

இணைய குற்றவாளிகள் டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்களை வாட்ஸ் அப்பில் கோப்புகளாக அனுப்புகின்றனர். இந்த கோப்புகளை(Apk file) பதிவிறக்கினால் மோசடியாளர்கள் சட்டவிரோத பண பரிமாற்றங்களுக்கு உங்களது வங்கி கணக்கை பயன்படுத்தி கொள்வார்கள். எனவே தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் திருமண அழைப்பிதழ் வந்தால் அதை தொடவோ திறக்கவோ வேண்டாம். இணைப்புகளை திறப்பதற்கு முன் அனுப்புநரை சரிபார்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்

News April 9, 2025

கொலை வழக்கில் 8 வருடத்திற்கு பிறகு தீர்ப்பு

image

மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்த மீனாட்சி. அவரது கணவர் தீனதயாளனிடம் ஜீவனாம்சம் கேட்டதற்காக தீனதயாளன் மற்றும் அவரது இரண்டாவது மனைவியின் மகன் செந்தில்குமார் இருவரும் சேர்ந்து மீனாட்சியை கடந்த 2017 ஆம் ஆண்டு அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். தீனதயாளன் வயது முப்பால் உயிரிழந்த நிலையில் செந்தில்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூ. 5000 அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

News April 8, 2025

மயிலாடுதுறையில் தரிசிக்க வேண்டிய கோயில்கள்

image

மயிலாடுதுறையில் வழிபட வேண்டிய முக்கிய கோயில்கள். ஸ்ரீ மயூரநாதர் ஆலயத்திற்கு மேற்கில் உள்ள ஸ்ரீ ஐயாநப்பர் ஆலயம். கூறைநாட்டில் உள்ள ஸ்ரீபுனுகீஸ்வரன் ஆலயம். காவிரி பாலத்திற்குத் தென்கரையில் உள்ள ஸ்ரீ பாலக்கரை விஸ்வநாதர் ஆலயம். . மயூரநாதஸ்வாமி கோவிலின் வடக்கு வாயில் அருகே உள்ள (உட்பிரகார தொடக்கம்) விஸ்வநாதர் கோயில். உங்களுக்கு தெரிந்த கோயில்களை கமெண்ட் செய்யவும்

News April 8, 2025

மயிலாடுதுறை: 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (SENIOR RELATIONSHIP OFFICER)உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்

News April 8, 2025

மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

image

வேப்பங்குளம் பெரியதெருவை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவருக்கும் இவரது மனைவி கோடீஸ்வரிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் கோடீஸ்வரியை தாக்கி சுவற்றில் மோதியதில் பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்தார். 2019 ஆம் ஆண்டு முதல் இசம்வம் குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி ராஜபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதித்து அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

News April 8, 2025

இளைஞரின் நற்செயலை பாராட்டிய எஸ்.பி

image

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் கடைவீதியில் சாலை ஓரத்தில் கிடந்த ரூ.10,000 பணத்தை அவ்வழியாக சென்ற ஹேமந்த் குமார் என்பவர் எடுத்து வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தியிடம் ஒப்படைத்தார். ஹேமந்த் குமாரின் நற்செயலை பொதுமக்கள் பாராட்டிய நிலையில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று ஹேமந்த்குமாரை நேரில் அழைத்து பாராட்டினார்.

News April 7, 2025

தபால் நிலையங்களில் ஆதார் முகாம்

image

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் ப்ராஜெக்ட் ஆரோ திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட மயிலாடுதுறை ஆர் எஸ், நீடூர், பேரளம் ஆகிய தபால் நிலையங்களில் ஒரு மாத காலம் ஆதார் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News April 7, 2025

Way2News செய்தி எதிரொலி: திறக்கப்பட்ட கழிப்பறை

image

கடந்த மாதம் Way2News செய்தியில் சீர்காழி திருமுல்லைவாசல் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதாக செய்தியானது வெளியிடப்பட்டது. இதனை அடுத்து தற்போது அந்த கழிப்பறை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியினர் மகிழ்ச்சியோடு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!