India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து நேற்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திருநங்கைகளின் கோரிக்கையை ஏற்று தேவையான நடவடிக்கைகள் கடன் உதவிகள் போன்றவை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் பயனடைய கேட்டுக் கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் திருநங்கைகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் ஆண்டு சேர்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது வருகின்ற ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தகவல் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் இணைய வழி குற்றம் பற்றி புகார் தெரிவிக்க www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி அல்லது இலவச தொலைபேசி எண் 1930 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் இணைய வழி குற்றப் பிரிவு (Cyber Crime) 9345881636 என்ற எண்ணிற்கும் புகார் அளிக்க மாவட்ட காவல்துறை சார்பில் இன்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மயிலாடுதுறை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அமைப்பான தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை நடத்திய மகளிர் கோடைகால பயிற்சி திருவாரூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில செயலாளர் தைக்கால் I. முபாரக் பயிற்சி முகாமில் பங்கேற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினார் மயிலாடுதுறை TMMP மாவட்ட பொருளாளர் M.நபுராபானு (முபல்லிகா) ,கொள்ளிடம் ஒன்றியம் மோசினா (முபல்லிகா) உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூர் காழியப்ப நல்லூர் காட்டுச்சேரி பொறையார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாலை ஓரங்களில் பனை நொங்கு விற்பனை நடைபெற்று வருகிறது. சில நாட்கள் மழை பெய்ததன் காரணமாக நொங்கு விற்பனை பாதிக்கப்பட்டது. மீண்டும் தற்பொழுது வெயில் காட்டத் தொடங்கியுள்ளதால் நேற்று பனை நொங்கு விற்பனை அமோகமாக நடைபெற்றது.

மயிலாடுதுறையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஏவிசி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எஸ்பி மீனா ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தின் அருகே வீனஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, வாகனம் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து புகார் தெரிவித்தார். இது தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் இளைய பாரத் மற்றும் கபிலன் ஆகிய இருவரை இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறை திருமஞ்சன வீதி பாலம் நகராட்சியின் வாயிலாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தொடர்ந்து பாலம் தற்போது சேதம் அடைந்து ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்துள்ளது. இந்த பாலத்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் புதிய பாலத்தை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

108 திவ்ய தேச தலங்களில் 26ஆவது திவ்ய தேசமான பரிமள ரங்கநாதர் பெருமாள் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தல புராணக் கதைகளைக் கொண்ட இக்கோயில் ஐந்து நிலை ராஜகோபுரங்களைக் கொண்டது. இந்த இராஜ கோபுரமானது 250 அடி நீளமும், 230 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதன் விமானம் வேத சக்ர விமானம் ஆகும். கருவறையில் 12 அடியில் பச்சை நிறத்தில் பெருமாள் சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
Sorry, no posts matched your criteria.