India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்டம் சாய் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 77வது குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 310 பயனாளிகளுக்கு ₹95 லட்சத்து 12 ஆயிரத்து 629 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய இங்கே<

1. மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் மாவட்ட காவல் துறையினர் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் ரயில் நிலையம் வழிபாட்டு தலங்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகளைக் கொண்டு சோதனை செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மணல்மேடு, கொள்ளிடம், தரங்கம்பாடி, செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 6.30 மணி வரை பெய்த மழை அளவு விவரங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மணல்மேடுவை சேர்ந்தவர் ராணி (45). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் கொல்லைப்புறத்துக்கு சென்ற பொழுது, திடீரென வழுக்கி கீழே விழுந்து அங்கு இருந்த மின்கம்பியை பிடித்ததாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கி ராணி மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.