Mayiladuthurai

News March 14, 2025

மயிலாடுதுறை: குரூப் தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

image

குரூப் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். அவா் நேற்று வெளியிட்ட செய்தி: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 4 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மாா்ச் 17 முதல் தொடங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் 9499055904 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம்.

News March 13, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த்  தலைமை வகித்தார். இதில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி துறை முகமது சபீர் ஆழம், மாவட்ட வருவாய் துறை அலுவலர் உமா மகேஸ்வரி அவர்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து வடிவேல் ஆகியோர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

News March 13, 2025

வியாபாரம் பெருக அருள் புரியும் விஜயநாதேஸ்வரர்

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசயமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களநாயகி சமேத திருவிஜயநாதேஸ்வரர் கோயில். தேவார பாடல் பெற்ற இக்கோயிலில் விஜயநாதரை வணங்கினால் ஜெயம் கிட்டும் என்பதால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற எடுத்த செயல்களில் வெற்றி அடைய ஏராளமான பக்தர்கள் வந்து தொழுகின்றனர். தொழிலில் முன்னேற வியாபாரம் சிறக்க வியாபார அபிவிருத்தி ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. Share It

News March 13, 2025

மயிலாடுதுறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 14.03.2025 தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறஉள்ளது. இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

News March 12, 2025

குழந்தை வரம் அருளும் நல்லாடை அக்னீஸ்வரர்

image

மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில். பரணி நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கும் இங்கு அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். பார்வதி தேவியின் சாபத்தால் ஒளியை இழந்த சூரியன் இங்கு சாபவிமோசனம் பெற்றதாக ஐதீகம் குழந்தை வரம், கணவன் மனைவி ஒற்றுமை வேண்டி அக்னீஸ்வரரை வழிபட்டால் கை மேல் பலன் கிடைக்கும். நண்பர்களுக்கு பகிரவும், Share It

News March 12, 2025

எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது . மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை வழங்கினர். மேலும் 11 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது . தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

News March 12, 2025

மயிலாடுதுறை வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்

image

மயிலாடுதுறை மார்ச் 12  திருச்சியில் இருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரம் வரை செல்லக்கூடிய சிறப்பு ரயில் ஏப்ரல் 4ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிறு திருச்சியில் இருந்து 5.35க்கு புறப்பட்டு மதியம் 12.30க்கு தாம்பரம் சென்றடைகிறது. தாம்பரத்தில் இருந்து 3.45 மதியம் புறப்பட்டு இரவு11.40 திருச்சி வருகிறது. ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

மயிலாடுதுறை இரட்டை கொலை: 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

image

மயிலாடுதுறை, முட்டம் கிராமத்தில், ஹரிஷ், சக்தி ஆகிய 2 வாலிபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சாராய வியாபாரிகளான முட்டம் வடக்குத் தெருவை சேர்ந்த முவேந்தன்(24), இவரது சகோதரர் தங்கதுரை(28), உறவினர் ராஜ்குமார்(34) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 3 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

News March 12, 2025

சீர்காழியில் தொடர் மின்வெட்டு – பொதுமக்கள் அவதி

image

சீர்காழி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு இடங்களில் பல மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் மின்சாரமும் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர் பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மின்சாரம் இல்லாமல் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பல மணி நேர மின்வெட்டால் கடைவீதி இருளில் மூழ்கி காட்சியளிக்கிறது

News March 11, 2025

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவு

image

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் ஹரிஷ் மற்றும் சக்தி இரண்டு இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.‌ இவ்வழக்கில் குற்றவாளிகள் தங்கதுரை , மூவேந்தன், ராஜ்குமார் ஆகிய மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்பி ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!