India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவா்கள் ஏப்.29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி ஆட்சியா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/நகராட்சி அலுவலகத்தில் ஏப்.29ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளார். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..
மயிலாடுதுறை மாவட்டத்தில் பச்சைப்பயறு கொள்முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். விவசாயிகள் விளைவித்த பச்சைப் பயறுகளை மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது. உள்ளூர் சந்தையில் கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், தமிழக அரசு கிலோ ரூ.86.82க்கு கொள்முதல் செய்ய உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள (PACKING HELPER) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.7,500 – ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் இங்கே <
சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள் mhc.tn.gov.in/recruitment எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். இப்போதே SHARE செய்யவும்…
சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களுடன் சேட் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்கள் உங்கள் வீடியோ உரையாடல்களை பதிவு செய்து அச்சுறுத்த பயன்படுத்தலாம் என மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம்.
கோடை விடுமுறை நெருங்கும் நிலையில் மயிலாடுதுறையில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள்: 1. பூம்புகார், 2. தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் கடற்கரை, 3. திருமுல்லைவாசல், 4.கீழபெரும்பட்டினம், 5.சீர்காழி, 6.பழையார் கடற்கரை, 7. திருவெண்காடு, 8.அனந்தமங்கலம் ஆகியவை கோடைகாலத்திற்கு ஏற்ற இடங்கள் ஆகும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.. உங்களுக்கு தெரிஞ்ச இடத்தை கமெண்ட் பண்ணுங்க
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 PACKING HELPER காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 வது படித்த 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்க்கை <
செம்பனார்கோவில் அருகே மேட்டிருப்பு மைதானத்தில் விஜய் என்பவர் குடிசையமைத்து மனைவி, மகன் ராகவன்(1½) உடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மக்களுக்கு இலவச உணவு வழங்க வந்த சரக்கு வாகனம் குழந்தை ராகவன் மீது மோதியது. படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வேன் டிரைவர் ரஜினியை(40) போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்லவும். இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும். நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைக்கலாம். மாலையில் அருகே உள்ள கோவிலுக்கு சென்று இந்த வருடத்தின் முதல் நாளை தொடங்கலாம். அனைவருக்கும் Share செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.