Mayiladuthurai

News February 21, 2025

வீடு மனை தோஷங்களை நீக்கும் மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி!

image

திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் மன்னச்சநல்லூரில் அமைந்துள்ளது பூமிநாத சுவாமி கோயில். இங்கு சிவபெருமான் வாஸ்து கடவுளாக அருள்பாலிக்கிறார். சொந்த வீடு வாங்க,புதிய வீடு கட்டுமானம் தொடங்கியதும் வாஸ்து குறைகளால் ஏற்படும் தடங்கள்,நிலம் மனை விற்பதில் தடை,சொத்து வழக்கு பிரச்சனை உள்ளிட்ட 16 விதமான மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு சக்தி வாய்ந்த ஸ்தலமாக இது விளங்குகிறது.

News February 21, 2025

சீர்காழியில் அந்தியோதயா ரயில் நின்று செல்ல கோரி மனு

image

சீர்காழி ரயில் நிலையத்தில்அந்தியோதயா ரயில் நின்று செல்லாததால் மாணவ-மாணவிகள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் என பல்வேறு தரப்பினர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மயிலாடுதுறை எம்.பி ஆர். சுதாவிடம் இது குறித்த கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

News February 21, 2025

குழந்தைகள் பாதுகாப்பு புறத்தொடர்பு பணிக்கான அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் புறத்தொடர்பு பணியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் இதற்கான விண்ணப்பப்படிவத்தை <>http://www.mayiladuthurai.nic<<>> என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, இன்று (பிப்.21) மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

News February 20, 2025

4448 வியாதிகள் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோயில்

image

வைத்தீஸ்வரன் கோயிலில் செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்படும் பக்தர்கள் செவ்வாய் பரிகார தோஷ நிவர்த்தி பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழக்கம். இக்கோயிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி அம்மனை வழிபாடு செய்து கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் திரு சாந்து உருண்டை எனும் தீர்த்த மண் பிரசாதத்தை 48 நாட்கள் சாப்பிட்டு வணங்கி வந்தால் தீராத வியாதிகள் தீரும் என்பது ஐதீகம். Share It

News February 20, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கல்லூரியில் தமிழக முதல்வரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் தரங்கம்பாடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணிகள் குறித்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்தாலோசித்தார்.

News February 20, 2025

காட்டுப்பன்றி தாக்கி விவசாய தொழிலாளி படுகாயம்

image

மயிலாடுதுறை தாலுகா ஆனந்ததாண்டவபுரத்தை அடுத்த ஆற்காடு கீழத்தெருவைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி கண்ணுசாமி (60) நேற்று காலை விவசாய பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி செல்லும்போது, காட்டுப்பன்றி ஒன்று திடீரென அவரை தாக்கியுள்ளது. இதில் உடல் முழுதும் பலத்த காயங்கள் ஏற்பட்டு தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News February 19, 2025

மயிலாடுதுறை இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையை தட்டி கேட்ட சக்தி மற்றும் ஹரிஷ் ஆகிய 2 வாலிபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மூவேந்தன் (24), தங்கதுரை (28), ராஜ்குமார் (34), முனுசாமி (48), மஞ்சுளா (47) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முட்டம் வடக்கு தெருவைச் சேர்ந்த சஞ்சய் (22) என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார்.

News February 18, 2025

குழந்தை வரம் சுகப்பிரசவம் அருளும் திருச்சி தாயுமானவர் சுவாமி

image

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு கீழே அமைந்துள்ளது தாயுமானவ சுவாமி கோயில். தாயுமானவரை மனம் உருகி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்றும் கர்ப்பிணி பெண்கள் வாழைத்தார் வாங்கி தொட்டில் கட்டி வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என கூறப்படுகிறது. இங்கு சித்திரை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கான மருந்து வழங்கப்படுவது விசேஷமாகும்

News February 18, 2025

மயிலாடுதுறை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் , மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News February 17, 2025

நியாய விலை கடை பணியாளர்களுக்கு ரொக்க பரிசு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். நிகழ்வில் அரசு அதிகாரிகள் பலர் உடன் பங்கேற்றனர்.

error: Content is protected !!