Mayiladuthurai

News April 24, 2024

மயிலாடுதுறை அருகே வெடி விபத்து- 6 பேரின் நிலை?

image

சீர்காழி அருகே தாண்டவன்குளம் கன்னியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.நேற்றிரவு வான வேடிக்கை நடைபெற்றது. அப்போது வெடி விபத்து ஏற்பட்டு பக்தர்கள் கூட்டத்தில் வெடித்து சிதறியது. இதில் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 24, 2024

மயிலாடுதுறை: மிதந்து வரும் முதலை..

image

சீர்காழி அருகே கூப்பிடுவான் உப்பனாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் முதலை நடமாடுவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அச்சமடைந்த உள்ளூர்வாசிகள் முதலை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் வனத்துறை அலுவலர்கள்,முதலை நடமாட்டம் இருப்பதாகவும், இதனால் ஆற்றின் உட்பகுதியில் பொதுமக்கள் இறங்கவோ மற்றும் கரைப்பகுதியில் நடக்கவோ கூடாது எனவும் இன்று எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

News April 24, 2024

மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதுகாப்பு அறைகளுக்கு போடப்பட்டுள்ள மூன்றடுக்கு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அங்கு பணியில் இருக்கும் துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட எஸ்பி மீனா இன்று நேரில் சந்தித்து தணிக்கை மேற்கொண்டார்.

News April 24, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏ.வி.சி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்கு பாதுகாப்பு அறைகளின் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மகாபாரதி இன்று ஆய்வு செய்தார். அப்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News April 24, 2024

மயிலாடுதுறை: சிறப்பு தூய்மை பணி

image

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட சித்தர்காடு அருகே சந்தைப்பேட்டை தெரு மற்றும் பாரதி நகர் இணைப்பு ஆகிய பகுதிகளில் சிறப்பு தூய்மை பணியானது மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து துப்புரவு பணியாளர்களைக் கொண்டு சாலையோரம் மண்டி கிடந்த புதர்கள் மற்றும் குப்பைகள் அனைத்தும் அப்பகுதிகளில் இருந்து இன்று அகற்றப்பட்டது.

News April 21, 2024

மயிலாடுதுறையில் ஓட்டு சதவீதம்

image

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் பதிவான ஓட்டு சதவீதம் என்பது 3வது முறையாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.71 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மயிலாடுதுறையில் 70.09 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News April 20, 2024

சீர்காழி பள்ளிவாசலில் ரத்ததான முகாம்

image

சீர்காழியில் உள்ள ஜாமிஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஈகை திருநாளை முன்னிட்டு சீர்காழி அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் தேவைக்காக ரத்த தான முகாம் நாளை(ஏப்.21) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. காலை 9: 00 மணி முதல் 12: 30 மணி வரை நடைபெற உள்ள ரத்ததான முகாமில் ஆர்வமுள்ள பொதுமக்கள் முன்பதிவு செய்து பங்கேற்று ரத்த தானம் வழங்கலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.

News April 20, 2024

மயிலாடுதுறையில் இறைச்சி விற்பனைக்கு தடை

image

மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் இறைச்சி விற்பனை நாளை ஏப்ரல் 21ஆம் தேதி தடை செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி விற்பனை செய்தால் உரிய அபராதம் விதிக்கப்பட்டு மிருகவதை தடுப்புச் சட்டம் 1960 -இன்படியும் , அரசு உத்தரவின் படியும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இன்று கூறப்பட்டுள்ளது.

News April 20, 2024

பாதுகாப்பு அறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு

image

மயிலாடுதுறையில் வாக்கு என்னும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் 57 மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் , 90 தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்களும் , 200 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

மக்களுக்கு ஓர் அறிவிப்பு

image

சீர்காழியில் உள்ள ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை (ஏப்ரல்.21) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. ஆகையால் தேர் சுற்றி வரும் நான்கு வீதிகளில் பாதுகாப்பிற்காக மின் நிறுத்தம் செய்து தேர் சுற்றி வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

error: Content is protected !!