Mayiladuthurai

News March 3, 2025

பயனாளிக்கு தையல் இயந்திரம் வழங்கிய ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News March 3, 2025

திருமண உதவித்தொகை ஆணை வழங்கிய கலெக்டர்

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகைக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உள்ளனர்.

News March 3, 2025

தரங்கம்பாடியில் சார்ஜ் போடும் போது வெடித்து சிதறிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சிங்காரவேலவர் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி இவரது மனைவி ஜானகி தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இன்று பேட்டரி சார்ஜ் செய்தார். அப்போது திடீரென பேட்டரி வெடித்து சிதறியது. இதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கடல் சார்ந்த படகு எஞ்சின், டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. பொறையார் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News March 3, 2025

பாமக தலைவரின் விழாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ

image

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜிகே.மணி அவர்களின் பேரனின் திருமண வரவேற்பு விழாவானது. இன்று திருக்கடையூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.அதற்கு கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ராஜ்குமார் வருகை தந்து வாழ்த்தினார்கள்.

News March 2, 2025

மயிலாடுதுறை ஆட்சியருக்கு சேர்மன் வாழ்த்து

image

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியராக ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் நேரில் சென்று ஆட்சியருக்கு பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கலந்துரையாடிய நிலையில் நினைவு பரிசாக ஆட்சியருக்கு புத்தகம் வழங்கினார்.

News March 2, 2025

மயிலாடுதுறை பெயர்க்காரணம் தெரியுமா?

image

பார்வதி தேவி மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால், இப்பகுதி மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டு வரை மயூரபுரம் என்றும், பின்பு மாயவரம் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊர் 1982இல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது மயிலாடுதுறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. SHARE NOW

News March 1, 2025

மூதாட்டிக்கு உதவிய அரசு ஊழியர் பலர் பாராட்டு

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தரங்கம்பாடி தாலுகா பாலூர் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டிக்கு தனக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என கூறி விண்ணப்பம் செய்ய சென்று இருந்தார். அப்பொழுது அரசு அதிகாரி பாபு என்பவர் அவரை அழைத்து இ சேவை மையத்திற்கு சென்று ஆவணத்தை வைத்து பார்க்கும் பொழுது வங்கி கணக்கில் இருப்பு இருந்தது தெரிந்தது. அதனை ஆவணத்தின் அடிப்படையில் பெற்று வழங்கினார்.

News March 1, 2025

ரூ.78,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

image

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மாதம் ரூ.23 000 முதல் ரூ.78,000 வரையிலான சம்பளத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 18 முதல் 26 வயதுக்குள் இருக்கும் தகுதியானவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW

News March 1, 2025

மயிலாடுதுறை புதிய ஆட்சியர்

image

மயிலாடுதுறையில் மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றி தலைமை செயளர் நேற்று உத்தரவிட்டிருந்தார். மேலும் ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை மாவட்ட புதிய ஆட்சியராக நியமனம் செய்து அறிவிக்கப்பட்டிருந்தார்.

News February 28, 2025

மயிலாடுதுறை ஆட்சியர் மாற்றம்

image

மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவு பிறத்துள்ளார். புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூன்றரை வயது குழந்தை பாலியல் தொல்லை குறித்து முன்னாள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சர்ச்சையாக பேசிருந்தார். இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!