Mayiladuthurai

News March 23, 2025

தீ விபத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி

image

சீர்காழி அருகே காத்திருப்பு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மனைவி தீபா. இவரது கூரை வீடு இரு தினங்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதம் அடைந்தது. இதனை அறிந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட தீபாவை நேரில் சந்தித்து நிதி உதவியும் நிவாரண பொருட்களையும் வழங்கி ஆறுதல் கூறினர்.

News March 22, 2025

மயிலாடுதுறை காவல்துறையினர் அணிவகுப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம காவல்துறை சார்பில்

காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில்
மயிலாடுதுறை காவல்துறையினர்,

மயிலாடுதுறை நகரில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அணிவகுப்பு நடத்தினர்.
மயிலாடுதுறை காவல் நிலையத்தை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் காவலர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு மயிலாடுதுறை மக்களிடையே பாராட்டை பெற்றது.

News March 22, 2025

தேமுதிக மாவட்ட செயலாளர் நியமனம்

image

மயிலாடுதுறை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக செயலாளராக பண்ணை சொ.பாலு என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள பண்ணை பாலு மயிலாடுதுறை நகர செயலாளராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2025

எம்பி சந்தித்த மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதாவை, இன்று மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வழுவூர் விஜி.கே.மணி, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நேரில் சென்று சந்தித்து ரயில் நிலையம் தொடர்பான கட்டுமான பணி உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பி சிறப்பாக செயல்படுவதற்காக வாழ்த்துக்கள் கூறினார்.

News March 21, 2025

சர்ப தோஷம் நீக்கும் கீழப்பெரும்பள்ளம் கேது பகவான்

image

கீழப்பெரும்பள்ளத்தில் உள்ளது நாகநாதர் கோயில். நவகிரகங்களில் ஒருவரான கேது பகவான் மனித உடலும், பாம்பு தலையும் கொண்டவர். பார்கடலை கடைய உதவிய வாசுகி பாம்பு தன் பாவம் போக்க சிவபெருமானிடம் வேண்ட, வாசுகி பக்தியை கண்டு நாகநாத சாமி எனும் பெயரில் இக்கோயிலில் மூலவராக உள்ளார். நாக தோஷம் நீங்க இவரை வழிபடுவது சிறப்பு. இவருக்கு கொள்ளு வைத்து வழிபட்டால் தீரா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. SHARE செய்யவும்

News March 21, 2025

22 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை தண்டனை

image

மயிலாடுதுறையில் கடந்த 2003 ஆம் ஆண்டு தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்த ஏழுமலை என்பவரிடம் ராமமூர்த்தி கடனுக்கு பழங்கள் கேட்டுள்ளார். ஏழுமலை பழங்களை கொடுக்க மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இந்த வழக்கு மயிலாடுதுறை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ராமமூர்த்திக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி கவிதா நேற்று உத்திரவிட்டுள்ளார்.

News March 21, 2025

மயிலாடுதுறை இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

image

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அபிநாத் (20) கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அபிநாத் மீது ஏற்கனவே 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதால் அபிநாத்தை எஸ்.பி.ஸ்டாலின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.

News March 21, 2025

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்வே உயர் அதிகாரி இன்று ஆய்வு

image

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தரமற்றதாகவும் காலதாமதமாகவும் நடைபெறுவதாக நாடாளுமன்ற கூட்டத்தில் மயிலாடுதுறை எம்.பி சுதா குற்றம் சாட்டி பேசினார். இந்நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்றத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

News March 20, 2025

சீர்காழியில் மாபெரும் மிதிவண்டி போட்டி

image

சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாபெரும் மிதிவண்டி போட்டி வருகிற மார்ச் 23ஆம் தேதி ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் 14 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.முதல் பரிசு ரூ. 5000 வழங்கப்பட உள்ளது.30 கி.மீ சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

News March 20, 2025

அரசுப்பள்ளி புதிய கட்டிடம் ஆய்வுசெய்த மாவட்ட கலெக்டர்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்  ஆய்வு செய்தார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. உமாமகேஷ்வரி , மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.சாந்தி ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!