India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாலை விபத்தில் படுகாயமுற்றவா்களை காப்பாற்ற உதவுபவா்களுக்கு நற்கருணை வீரன் விருது வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். விபத்தில் காயமடைந்தவா்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்குபவா்களை ஊக்குவிக்க நற்கருணை வீரன் விருது வழங்கப்படுகிறது. மேலும் ₹5000 ரொக்கமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <
தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ <
மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது அலைபேசியில் 9626169492 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை சட்டவிரோத குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 355 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட 356 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 169 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட 210 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்து அபராதம் விதித்துள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
பெரும் சாலை விபத்தில் சிக்கியவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரது உயிரை காப்பாற்றும் நபருக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் நற்கருணை வீரன் விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மத்திய அரசின் ரூ. 5,000 மற்றும் மாநில அரசின் ரூ.5,000 என மொத்தம் ரூ.10,000 மற்றும் பாராட்டு சான்றும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே ஷேர் பண்ணுங்க!
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்ட தேதி நாளையுடன் (ஏப்.25) முடிவடைகிறது. எனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே <
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு வைத்தீஸ்வரன்கோவிலை சேர்ந்த கதிரவன் (25) என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இவ்வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.