Mayiladuthurai

News March 9, 2025

எதிரிகளின் தொல்லை நீங்க அருள்புரியும் சரபேஸ்வரர்

image

கும்பகோணம்,திருபுவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் கோயிலில் மனிதன்,பறவை மிருகம் போன்ற கலவையாக அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை 11 வாரம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல் பில்லி சூனியத்தால் துன்பப்படுவோர், தீராத நோயுற்றவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு அவர்களின் தலையெழுத்தே மாறும் என்பது ஐதீகம்.Share It

News March 9, 2025

சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் விபத்து: தந்தை கைது

image

மயிலாடுதுறையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த வயலில் விழுந்தது. இதனால் பின்னால் அமர்ந்திருந்த சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்திய சிறுவன் 18 வயது நிரம்பாததாலும் உரிமம் பெறாததாலும் காயம் பட்ட சிறுவனின் தயார் அளித்த புகாரின்பேரில் சிறுவனின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

News March 9, 2025

தங்கமகள் விருது பெற்ற மயிலாடுதுறை சமூக ஆர்வலர்

image

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, நேற்று (மார்ச்.09)  மயிலாடுதுறை மாவட்டத்தில் தங்கமகள் 2025 என்ற விருதை மயிலை கருணை கரங்கள் அறக்கட்டளை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் எண்ணற்ற சேவைகளை செய்தமைக்கு அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துகள் கூறிவருகின்றனர்.

News March 9, 2025

உறுதிமொழி எடுத்துக்கொண்ட அதிகாரிகள்

image

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் தூய்மை பாரத இயக்கம் சுகாதார விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று பேரணியை தொடங்கி வைத்தனர். தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News March 8, 2025

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கல்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று உலக மகளிர் தினத்தை ஒட்டி மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏக்கள் நிவேதா முருகன், ராஜ்குமார், பன்னீர்செல்வம் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 8, 2025

மகளிர் தின விழாவில் மகளிருக்கு நல உதவி

image

செம்பனார்கோவில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இன்று மகளிர் தின விழாவை முன்னிட்டு மகளிருக்கு கடனுதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு மகளிருக்கு கடன் உதவிக்கான காசோலை வழங்கினார். அப்போது பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் மயிலாடுதுறை எம்.எல்.ஏ எஸ் ராஜகுமார் சீர்காழி எம்.எல்.ஏ எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News March 8, 2025

மயிலாடுதுறையில் 11 நாட்களில் மது சாராய வழங்குகளில் 93 பேர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் எஸ்.பி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மதுவிலக்கு போலீசார் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு வாகன சோதனையில் ஈடுபட்டதில் கடந்த 11 நாட்களில் மது, சாராய வழக்குகளில் 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 450 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

மயிலாடுதுறைக்கு கனமழை எச்சரிக்கை

image

கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.

News March 8, 2025

மகளிர் சுய உதவி குழு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு

image

தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

News March 8, 2025

மயிலாடுதுறை: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலை

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச்.10 கடைசி நாளாகும். பிறரும் பயனடைய SHARE பண்ணுங்க…

error: Content is protected !!