India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Customer Care Executive பதவிக்கு 50 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இங்கே<
தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் குறித்த பிரச்சனைகள் மற்றும் புகார்களுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ▶ வட்ட வழங்கல் அலுவலர், குத்தாலம்-04364-221150, ▶ வட்ட வழங்கல் அலுவலர், தரங்கம்பாடி-9445000308, ▶ வட்ட வழங்கல் அலுவலர், சீர்காழி-9445000309 ஆகிய எங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 39 ஆயிரத்து 208 எக்டேர் பரப்பளவு சாகுபடி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு மொத்த விதை தேவை 1250 டன். தற்போது வரை 204 டன் குறுகிய கால நெல் ரகங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 241 டன் விதைகள் மற்றும் உரங்களும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கருவாழக்கரை மேலையூர் உத்திராபதியார் ஆலய அமுதுபடையல் திருவிழாவிற்க்காக அமைக்கப்பட்டிருந்த ஒலி ஒளியின் மின் கம்பியை சரியான முறையில் கட்டாததால் அறுந்து கீழே விழுந்ததில் அருகே விளையாடிக் கொண்டிருந்த மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கதுரை மகன் தமிழ்துரை (வயது15) மின்சாரம் தாக்கி நேற்று இரவு சம்பவ இடத்திலேயே பலியானார். சிறுவன் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
மயிலாடுதுறை மாவட்டம், கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள நாகநாதர் கோயிலில், கேது பகவான் அனுக்கிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் கேது பகவான் இன்று மாலை 4:20 மணிக்கு சிம்ம ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்…
மணல்மேடு அருகே காருக்குடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வேல்முருகன் (39). சம்பவத்தன்று வேல்முருகன், மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது, அவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில், மன வேதனை அடைந்த வேல்முருகன், தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. நாளை ஏப்.26 மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE IT.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 8ஆம் தேதி ஜமாபந்தி தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்களிலும் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மே.8ஆம் தேதி முதல் மே.15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
Sorry, no posts matched your criteria.