Mayiladuthurai

News March 13, 2025

மயிலாடுதுறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 14.03.2025 தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறஉள்ளது. இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

News March 12, 2025

குழந்தை வரம் அருளும் நல்லாடை அக்னீஸ்வரர்

image

மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில். பரணி நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கும் இங்கு அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். பார்வதி தேவியின் சாபத்தால் ஒளியை இழந்த சூரியன் இங்கு சாபவிமோசனம் பெற்றதாக ஐதீகம் குழந்தை வரம், கணவன் மனைவி ஒற்றுமை வேண்டி அக்னீஸ்வரரை வழிபட்டால் கை மேல் பலன் கிடைக்கும். நண்பர்களுக்கு பகிரவும், Share It

News March 12, 2025

எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது . மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை வழங்கினர். மேலும் 11 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது . தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

News March 12, 2025

மயிலாடுதுறை வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்

image

மயிலாடுதுறை மார்ச் 12  திருச்சியில் இருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரம் வரை செல்லக்கூடிய சிறப்பு ரயில் ஏப்ரல் 4ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிறு திருச்சியில் இருந்து 5.35க்கு புறப்பட்டு மதியம் 12.30க்கு தாம்பரம் சென்றடைகிறது. தாம்பரத்தில் இருந்து 3.45 மதியம் புறப்பட்டு இரவு11.40 திருச்சி வருகிறது. ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

மயிலாடுதுறை இரட்டை கொலை: 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

image

மயிலாடுதுறை, முட்டம் கிராமத்தில், ஹரிஷ், சக்தி ஆகிய 2 வாலிபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சாராய வியாபாரிகளான முட்டம் வடக்குத் தெருவை சேர்ந்த முவேந்தன்(24), இவரது சகோதரர் தங்கதுரை(28), உறவினர் ராஜ்குமார்(34) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 3 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

News March 12, 2025

சீர்காழியில் தொடர் மின்வெட்டு – பொதுமக்கள் அவதி

image

சீர்காழி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு இடங்களில் பல மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் மின்சாரமும் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர் பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மின்சாரம் இல்லாமல் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பல மணி நேர மின்வெட்டால் கடைவீதி இருளில் மூழ்கி காட்சியளிக்கிறது

News March 11, 2025

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவு

image

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் ஹரிஷ் மற்றும் சக்தி இரண்டு இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.‌ இவ்வழக்கில் குற்றவாளிகள் தங்கதுரை , மூவேந்தன், ராஜ்குமார் ஆகிய மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்பி ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News March 11, 2025

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று (மார்ச்.11) மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW..

News March 10, 2025

மங்கநல்லூரில் குருணை தின்று ஆடுகள் சாவு

image

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மேலமங்கநல்லூர் பாய் காரன் தெருவை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது உளுந்து பயிறு விதைக்கப்பட்டிருந்த வயலில் எலி தொல்லைக்காக குருணை வைத்துள்ளார். இதனை தின்ற அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 10, 2025

மயிலாடுதுறை: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலை

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.10) கடைசி நாளாகும். இப்போதே SHARE பண்ணுங்க…

error: Content is protected !!