Mayiladuthurai

News September 30, 2025

மயிலாடுதுறை: மத்திய அரசு வேலை…Apply பண்ணுங்க!

image

மயிலாடுதுறை: மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள பெண் செவிலியர், விடுதி காப்பாளர், கணக்காளர், இளநிலை செயலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் போன்ற பல்வேறு பணிகள் நிரப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 23.10.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். தகவலை SHARE பண்ணுங்க!

News September 30, 2025

மயிலாடுதுறை: புகார் எண் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜீ. ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்‌. மேலும் பொதுமக்கள் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றம் சம்பந்தமாக 10581 என்ற இலவச உதவி எண் அல்லது 96261-69492 என்ற அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்

News September 30, 2025

மயிலாடுதுறை: கஞ்சா விற்ற 361 பேர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் சட்டவிரோத கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 356 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 361 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 30.015 கி கஞ்சா கைபற்றப்பட்டுள்ளது. குட்கா விற்பனைக்கு பயன்படுத்திய 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்காவிற்பனையில் ஈடுபட்ட 26 கடைகள் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

News September 30, 2025

மயிலாடுதுறை: வெளியூர் செல்லும் மக்கள் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறை மக்களே, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை முடிந்து வெளி ஊர்களுக்கு பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? அப்போ, இந்த தகவல் உங்களுக்கு தான்! விடுமுறை நாட்கள் முடிந்து வெளியூர் திரும்பும் போது, பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் ‘1800 599 1500’ என்ற எண்ணில் எளிதாக புகாரளிக்கலாம். கட்டண விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். SHARE பண்ணுங்க!

News September 30, 2025

மயிலாடுதுறையில் அரசு வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், இன்றுக்குள் (செப்.30) இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே <>க்ளிக்<<>> செய்யவும்.SHARE பண்ணுங்க

News September 30, 2025

மயிலாடுதுறை மாவட்ட மக்கள் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறை மக்களே (30.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
1.மயிலாடுதுறை நகராட்சி – ஏ.ஜே.கே மஹால், கணபதி நகர், மயிலாடுதுறை
2.மயிலாடுதுறை வட்டாரம் – அரசு மேல்நிலைப்பள்ளி, ஆனதாண்டவபுரம்
3.குத்தாலம் வட்டாரம் – அறிஞர் அண்ணா திருமண மண்டபம், மேக்கிரிமங்கலம்
4.செம்பனார்கோயில் வட்டாரம் – நாடார் உறவின்முறை திருமண மண்டபம், ஆறுபாதி
அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 30, 2025

மயிலாடுதுறை: மதுபான கடைகளை மூட உத்தரவு

image

மயிலாடுதுறை ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையரின் கடிதத்தின்படி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லரை விற்பனைக்கடைகள், தனியார் உரிமம் பெற்ற உயர் ரக மதுபானக்க டைகள் மற்றும் மதுகூடங்கள் அனைத்தையும் அக்.2-ந்தேதி காந்திஜெயந்தி அன்று முழுவதுமாக மூட வேண்டும். மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவித்துள்ளார்.

News September 30, 2025

மயிலாடுதுறை: பட்டாசு விற்பனையாளர்களுக்கு பயிற்சி

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று செவ்வாய்கிழமை (30.9.2025) பகல் 12:00 மணி அளவில் வெடிபொருள் சில்லறை விற்பனை உரிமையாளர்களுக்கு வெடி பொருட்கள் கையாளுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் அமைக்கப்படும் சில்லறை பட்டாசு விற்பனையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

News September 30, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று இரவு 10 மணி முதல் (செப்.30) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 29, 2025

மயிலாடுதுறை: நேரில் மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் மனுக்கள் பெற்றார்.

error: Content is protected !!