Mayiladuthurai

News April 3, 2024

சீர்காழி அருகே தீ பற்றி எரிந்த வீடு

image

சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் ஊராட்சி தொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சம்மாள் செல்லையா இவரது வீட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் மின்கசிவினால் கூரை வீடு தீ பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து அங்கு சென்று தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் வீடு முற்றிலும் எரிந்து வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது.

News April 3, 2024

மயிலாடுதுறை: கடலில் இறங்கி போராட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 500க்கும் மேற்பட்ட மக்கள் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். கீழமூவர்கரை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. அவற்றை நிறைவேற்றி தரக்கோரி, தேர்தலை புறக்கணிப்பதாக கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 3, 2024

மயிலாடுதுறை: அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி

image

மயிலாடுதுறை நகரத்திற்குட்பட்ட கீழ நாஞ்சில் நாடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட இளைஞரணி செயலாளர் நான்கில் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News April 3, 2024

மயிலாடுதுறை: சிறுத்தை விவகாரம்..விடுமுறை

image

மயிலாடுதுறை அருகே செம்மங்குளம் பகுதியில் இன்று (ஏப்.3) சாலையில் சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அங்குள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து சிறுத்தை குறித்து தகவல் தெரிந்தால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை காவல்துறை தெரிவித்துள்ளது.

News April 3, 2024

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டம் அருகே கூறைநாடு பகுதியில் இன்று (ஏப்.3) சிறுத்தை நடமாட்டத்தை கூறைநாடு சாலையில் சிறுத்தை சுற்றித்திருந்த சிசிடிவி வீடியோ வெளியானதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மேலும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து சிறுத்தை குறித்து தகவல் தெரிந்தால் 9626709017 என்ற எண்ணை தெடர்புகொள்ளுமாறு மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News April 3, 2024

மயிலாடுதுறை: கோவிலில் வழிபாடு

image

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் எனும் குமர கோவிலில் பங்குனி மாத செவ்வாய்கிழமையை ஒட்டி நேற்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக முருகப் பெருமானுக்கு பால் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ மலர் அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

News April 2, 2024

சீர்காழி அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

image

சீர்காழி அருகே கீழமூவர்கரை கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது. அதில் மீனவர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர வேண்டியும், எங்கள் உரிமைகளை பெற நாங்களே பணம் கொடுக்கும் அவலத்தை எதிர்த்தும், இனியும் ஏமாறப்போவதில்லை, வாக்களிக்கப் போவதில்லை என்ற வாசகங்களுடன் அரசியல்வாதிகளுக்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 2, 2024

தருமபுரம் ஆதீனத்தை சந்தித்த மதுரை ஆதீனம்

image

மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஆதீன மடத்திற்கு வருகை தந்த மதுரை ஆதீனத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை மதுரை ஆதீனம் இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

News April 2, 2024

மயிலாடுதுறையில் நூதன முறையில் பிரச்சாரம்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சி பகுதிகளில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பாமக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பொறையார் காய்கறி சந்தையில் வாக்கு சேகரித்த போது காய்கறி கடையில் தானே காய்கறிகள் விற்பனை செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

News April 2, 2024

மயிலாடுதுறை அருகே காங்கிரஸ் தீவிர பிரச்சாரம் 

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திமுக வடக்கு ஒன்றியம், திருவாலங்காடு ஊராட்சியில் நேற்று மயிலாடுதுறையில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதாவை ஆதரித்து கைச்சின்னத்திற்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் குத்தாலம் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார்.

error: Content is protected !!