Mayiladuthurai

News April 5, 2025

மயிலாடுதுறை அருகே அதிசய கிணறு

image

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு எதிரில் உள்ள பிள்ளையார் கோயிலின் கிணறு கடலுக்கு அருகில் உள்ளது. கட்டப்பட்டு 100 ஆண்டுகளை கடந்தும் கடல் நீர் அருகில் சூழ்ந்த பிறகும் நீரின் சுவை கொஞ்சமும் மாறவில்லை. தரங்கை மக்கள் இன்றும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகள் கடலில் குளித்த பிறகு இக்கிணற்றில் மீண்டும் குளிக்க வருகிறார்கள். இது சுவையான நல்ல நீராக இருப்பதால் ஆச்சரியப்பட்டு செல்கிறார்கள்.

News April 5, 2025

வேலையில்லா இளைஞர்களுக்கு நற்செய்தி  

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்திலும், 04364-299790 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என கூறியுள்ளார்.

News April 5, 2025

மயிலாடுதுறையில் வேலை: ஆட்சியர் அறிவிப்பு 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாகவுள்ள கால்நடை மருத்துவ ஆலோசகா் நோ்முக தேர்வுக்கு ஓராண்டுக்கு தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடன் ஏப்.10ஆம் தேதி காலை 11 மணிக்கு தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நடைபெறும் நோ்முக தோ்வில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க) 

News April 5, 2025

மயிலாடுதுறையில் வேலை

image

மயிலாடுதுறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள FIELD MANAGER பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ரூ.15,000 -ரூ.25,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்க.

News April 5, 2025

சங்கரன்பந்தல்: சுகாதார நிலையத்தில் ஆண் சடலம்

image

மயிலாடுதுறை, சங்கரன்பந்தல் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தனியாக இருந்த கழிவறையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. மருத்துவமனை ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி இறந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 4, 2025

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் வருகிற ஏப். 8 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் ஆகியவற்றிற்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

News April 4, 2025

மயிலாடுதுறை: இந்தியாவின் முதல் அச்சகம்

image

இந்தியாவில் முதல் அச்சகம் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் தஞ்சை மண்டலத்திலும், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில்தான் முதல் அச்சகம் தொடங்கப்பட்டது. 1713ஆம் ஆண்டு, சீகன்பால்கு பாதிரியார் என்ற ஜெர்மானியரால் தொடங்கப்பட்ட இந்த அச்சகம் ‘டி நோபிலி அச்சகம்’ என்ற பெயரில் இன்றளவுன் செயல்படுகிறது. இதை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE செய்யுங்கள்.

News April 4, 2025

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் பொறையார் மற்றும் சீர்காழி செயற்பொறியாளர் அலுவலகங்களில், நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டண தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் உட்பட அனைத்து மின்சாரம் தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இக்கூடம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

News April 4, 2025

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் பொறையார் மற்றும் சீர்காழி செயற்பொறியாளர் அலுவலகங்களில், நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டண தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் உட்பட அனைத்து மின்சாரம் தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இக்கூடம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

News April 4, 2025

மயிலாடுதுறை கலெக்டர் அறிவுறுத்தல்

image

மயிலாடுதுறையில் வரும் நாள்களில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கலெக்டர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். கூரை வீடுகளில் வசிப்பவர்கள் கோடைக்காலம் முடியும் வரை அருகில் தண்ணீரை வைத்துக்கொள்ள வேண்டும். விறகு பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!