Mayiladuthurai

News April 18, 2024

மயிலாடுதுறையில் 195 நபர்கள் மீது குற்றத்தடுப்பு

image

மயிலாடுதுறையில் பிரச்சனைக்குரிய நபர்கள் , ரவுடிகள் கண்டறியப்பட்டு 195 நபர்கள் மீது குற்றத் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட எஸ்பி மேற்பார்வையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 6 காவல் துணை கண்காணிப்பாளர்கள் 21 காவல் ஆய்வாளர்கள் , 44 அதிவிரைவு குழுக்கள் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 18, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் 1480 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் துறையினர் இன்று தெரிவித்துள்ளனர். மேலும் பதற்றமான 52 வாக்கு மையங்களில் ஒவ்வொரு மையத்திலும் 1 காவலர் மற்றும் 4 மத்திய பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 18, 2024

மயிலாடுதுறை தொகுதி: இது உங்களுக்கு தெரியுமா !

image

2019 மக்களவைத் தேர்தலில், மயிலாடுதுறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ராமலிங்கம் வெற்றி பெற்று எம்.பியானார். இவர், மொத்தம் 5,99,292 (54.6%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான ராஜா 263 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!

News April 18, 2024

மயிலாடுதுறை அருகே தயார் நிலையில் அதிகாரிகள்

image

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பூட்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகள் இன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அர்ச்சனா வட்டாட்சியர் இளங்கோவன் முன்னிலையில் திறக்கப்பட்டு 288 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் வாகனங்களுடன் தயார் நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டுள்ளனர்.

News April 18, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தகவல்

image

மயிலாடுதுறையில் 100% வாக்கு பதிவு நடைபெற வேண்டி காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கடமை நிறைவேற்றுவதற்கு வெளி மாவட்டத்தில் இருந்து இம்மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 265 காவலர்களுக்கு தபால் ஓட்டும் , 425 காவலர்களுக்கு தேர்தல் பணி சான்றை பயன்படுத்தி அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 17, 2024

மயிலாடுதுறையில் பாதுகாப்பு பணியிடம் ஒதுக்கீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணியிடம் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

News April 17, 2024

மயிலாடுதுறையில் தீவிர சோதனை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி யாரேனும் செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்க வாகன சோதனை மற்றும் தங்கும் விடுதிகள் , திருமண மண்டபம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் இன்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.

News April 17, 2024

மயிலாடுதுறைக்கு பணி ஒதுக்கீடு செய்யும் முறை

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்காக வாக்குப்பதிவு அலுவலர்கள், காவல்துறையினர், தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக வாக்குசாவடி வாரியாக மூன்றாம் கட்டமாக பணி ஒதுக்கீடு செய்யும் முறை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 17, 2024

மயிலாடுதுறை: எடுத்துரைத்த தேர்தல் வாக்குறுதிகள்

image

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கொள்ளிடம் சுற்று வட்டார கிராமங்களில் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி பொது மக்களிடம் ஆதரவு திரட்டினார் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News April 17, 2024

மயிலாடுதுறை அருகே போலீஸ் குவிப்பு 

image

பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு சீர்காழி அடுத்த புதுப்பட்டினம் காவல்சரகத்தில் வாக்காளர்கள் 100% அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி போலீசாரின் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடைபெற்றது. புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் ஹேமலதா தலைமையில் காவல் ஆளினர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்று வடபாதி பகுதியிலிருந்து துவங்கி மாதானம் முத்து மாரியம்மன் கோவில் அருகே பேரணியை நிறைவு செய்தனர்.

error: Content is protected !!