India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக அஜித்குமார் என்கின்ற இளைஞரை 7 பேர் கொண்ட குழுவினர் கொலை செய்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு இடர்பாடுகள் ஏற்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், பட்டமங்களம் ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனரா என ஆட்சியர் மகாபாரதி இன்று ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக ம.க .ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பாபுவை அவரது இல்லத்தில் நேற்று மாலையில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் மேலும் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறையில் கலைஞர் காலனியை சேர்ந்த அஜித் குமார் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் 5 குற்றவாளிகளை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து மோகன்தாஸ் மற்றும் சத்யநாதன் ஆகிய இரண்டு குற்றவாளிகளை கைது செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலை சம்பவம் தொடர்பாக மொத்தம் 7 குற்றவாளிகள் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறையில் அஜித்குமார் என்கின்ற இளைஞர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தனிப்படை போலீசார் குற்றவாளிகள் சந்திரமோகன் (29) , சதீஷ் (26), பாலாஜி(29), ஸ்ரீராம் (27). சந்திரமௌலி ஆகிய ஐந்து நபரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்கள் தேர்தல் செலவீனம் கணக்கீட்டாளர்கள் ஆகியோருக்கான ஆய்வு கூட்டம் தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி , தேர்தல் செலவீன பார்வையாளர் வீ.டி.எஸ்எஸ்.நாகர்ஜீன் கிரான்டி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக பாபு அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக பாபு அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
தமிழகம், புதுவையில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இஸ் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணியே அமைக்காமல் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி இன்று (மார்ச் 21) 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் (பாதிக்கு பாதி பெண்கள்) பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக காளியம்மாள் களம் காண்கிறார்.நாளை மறுநாள் (மார்ச்-23) அன்று சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீர்காழி விவேகானந்தா கல்வி குழுமத்தின் குட் மாரிட்டன் பள்ளியின் சீனியர் கே.ஜி மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.பள்ளி நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்க,செயலர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் சுகந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்
Sorry, no posts matched your criteria.