India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், மத்திய அரசின் பங்களிப்போடு அமையவுள்ள கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணுமாறு, மே 6 ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தின் ஒவ்வொரு மேஜையிலும் ‘வெப் கேமரா’ வைத்து கண்காணிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக ஆட்சியர் மகாபாரதி நேற்று(மே 22) தெரிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணும் பணிக்காக 630 அலுவலர்களும், ஒவ்வொரு வேட்பாளரும் தனியே முகவர்கள் நியமிக்க அனுமதிக்கப்பட்டு அனுமதி சீட்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த வருடம் மட்டும் மே 21ஆம் தேதி வரை 1675 மதுவிலக்கு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 1688 நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களிடமிருந்து 44977 லிட்டர் பாண்டி சாராயம் , 3348 பாண்டி சாராய பாட்டில்கள் , 3498 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்காக தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக வாக்கு எண்ணும் அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், உதவியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான மகாபாரதி மற்றும் பல்வேறு அதிகாரிகள் இந்த பணிகளில் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் வருகின்ற ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணி அளவில் எண்ணப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் அலுவலர்கள் , ராணுவம், பாதுகாப்பு படை உள்ளிட்டவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் அளித்த வாக்குச் சீட்டுகள் மற்றும் முதியோர்கள் , மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வாக்குகள் 7 மேசைகளில் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீர்காழியில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி வருவதாகவும், இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து சீர்காழி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் வாகனம் இயக்க அனுமதித்தால் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி உள்ளார்.
சீர்காழியில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி வருவதாகவும், இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து சீர்காழி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் வாகனம் இயக்க அனுமதித்தால் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி உள்ளார்.
மயிலாடுதுறையில் பல்சர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது கல்லூரி காதல் ஜோடி இடையே ஏற்பட்ட காதல் பிரச்சனையில் காதலி பெட்ரோல் ஊற்றி தீவைத்ததில் தீக்காயமடைந்த காதலன் ஆகாஷ் கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார்.
தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காதலி சிந்துஜா சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். மயிலாடுதுறை போலீசார் சிந்துஜா மீது கொலை வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் இணைய வழி குற்றம் பற்றி உடனடியாக புகார் தெரிவிக்க https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1930 அல்லது மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் குற்றப்பிரிவு அலைபேசி எண் 9345881636 என்ற எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.