Mayiladuthurai

News May 31, 2024

மயிலாடுதுறையில் ஆலோசனை கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் நகர்ப்புற, ஊரக பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாருதல் , தூய்மைப்படுத்துதல் பணிகள் தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News May 30, 2024

மயிலாடுதுறையில் 10 மணி வரை மழை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது கோடை மழை முடிவடைந்து, ஆங்காங்கே வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 30, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக வருகிற ஜூன் மாதம் 07-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி உள்ளிட்ட கல்வித் தகுதியுடையவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News May 30, 2024

மயிலாடுதுறை பெருமாள் கோயில் சிறப்பு!

image

மயிலாடுதுறை, சீர்காழியில் உள்ள 28வது திவ்ய தேசமான திரிவிக்கிரம பெருமாள் கோயில். பாடலிகவனம் என்றழைக்கப்படும் இங்குள்ள பெருமாள், சீராம விண்ணகரம் தாடாளன், மற்றும் திருவிக்கிரம பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். புராணக்கதைகளைக் கொண்ட இக்கோயிலில் ஒருநாள் மட்டுமே உற்சவர் தரிசனம் செய்வார். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரமும், அர்த்த மண்டபம் மகாமண்டபம் என 2 மண்டபங்களும் உள்ளன.

News May 30, 2024

மயிலாடுதுறை திரிவிக்கிரம பெருமாள் கோயில் சிறப்பு!

image

மயிலாடுதுறை, சீர்காழியில் உள்ளது 28 ஆவது திவ்ய தேசமான திரிவிக்கிரம பெருமாள் கோயில். பாடலிகவனம் என்றழைக்கப்படும் இங்குள்ள பெருமாள், சீராம விண்ணகரம் தாடாளன், மற்றும் திருவிக்கிரம பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். புராணக்கதைகளைக் கொண்ட இக்கோயிலில் ஒருநாள் மட்டுமே உற்சவர் தரிசனம் செய்வார். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரமும், அர்த்த மண்டபம் மகாமண்டபம் என 2 மண்டபங்களும் உள்ளன.

News May 30, 2024

மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதில் பல்வேறு பொய்யான திட்டங்களை அறிவித்து நம்பிக்கை ஏற்படுத்தி ஏமாற்றி மோசடி செய்வது மற்றும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை நம்பி ஏமாற்றுவது வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்வது என பொதுமக்களை மோசடியில் ஈடுபடும் நபர்களிடமிருந்து விழிப்புடன் இருக்க பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்.

News May 30, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து நேற்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திருநங்கைகளின் கோரிக்கையை ஏற்று தேவையான நடவடிக்கைகள் கடன் உதவிகள் போன்றவை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். திருநங்கைகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் பயனடைய கேட்டுக் கொண்டுள்ளார்.

News May 29, 2024

திருநங்கைகளின் வாழ்வாதாரம் தொடர்பாக ஆலோசனை

image

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் திருநங்கைகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News May 29, 2024

மயிலாடுதுறை: தொழிற்பயிற்சி சேருவதற்கு விண்ணப்பங்கள்

image

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் ஆண்டு சேர்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது வருகின்ற ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தகவல் தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் இணைய வழி குற்றம் பற்றி புகார் தெரிவிக்க www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி அல்லது இலவச தொலைபேசி எண் 1930 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் இணைய வழி குற்றப் பிரிவு (Cyber Crime) 9345881636 என்ற எண்ணிற்கும் புகார் அளிக்க மாவட்ட காவல்துறை சார்பில் இன்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!