India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்காழியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒரு பகுதியாக சீர்காழியில் அமைந்துள்ள அன்பாலயா ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் இன்று 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தின் டி எல் ஓ மாவட்ட திட்ட தொடர்பாளர் விஜய் அமிர்தராஜ் நாங்கூர். அரசு பள்ளி திட்ட அலுவலர் சக்கரவர்த்தி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே சட்டவிரோதமாக காலை நேரத்தில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்கள் விற்பனை செய்துகொண்டிருந்த சதீஷ்குமார் என்பவரை போலீசார் மடக்கிபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடமிருந்து 150 மதுபாட்டில் 110 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
மயிலாடுதுறை காவிரி நகர் மேம்பாலம் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதனால் நேற்று இரவு 12 மணி முதல் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் பாராமல் நாளை முதல் மாற்று வழிகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மூவலூர் – மாப்படுகை சாலையை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் ஆன்லைனில் வேலை தேடும் போது போலியான வலைதள பக்கங்களில் சென்று உங்கள் சுயவிவரங்களை பதிந்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மயிலாடுதுறை காவிரி நகர் மேம்பாலம் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதனால் நேற்று இரவு 12 மணி முதல் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் பாராமல் நாளை முதல் மாற்று வழிகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மூவலூர் – மாப்படுகை சாலையை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று இரவு 10 மணி முதல் (அக்.,2) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்காழியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், 20 கிலோ குட்கா கடத்திய ரிஸ்வான் (21) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாண்டு மாவட்டத்தில் 541 வழக்குகள் பதிவு, 556 பேர் கைது, 1706 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் குட்கா விற்பனை, கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் அரவிந்த் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மணவாளன் மற்றும் போலீசார் நேற்று கடைவீதியில் அரவிந்தை மடக்கி பிடித்தனர். இதையடுத்து இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்
முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.