India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 4 கோபுர வாசல்கள் உண்டு. இவ்வழியாக சமயக்குரவர்கள் நால்வர் வந்து வழிபட்ட சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு. கிழக்கு வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கு வாசல் வழியாக அப்பரடிகளும், வடக்கு கோபுர வாசல் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுர வாசல் வழியாக ஞானசம்பந்தரும் நுழைந்து சிதம்பரம் நடராஜப் பெருமானை வழிபட்டனர்கள். இதுவே சிதம்பர கோபுர ரகசியமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 29.03.2025 தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை சீர்காழி விவேகானந்தா மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்காக 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கலாம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று மாலையில் ஏராளமானோர் கடற்கரைக்கு வரும் நிலையில், பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் காவல்துறை அறிவுறுத்தல்.
சீர்காழி அருகே காத்திருப்பு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மனைவி தீபா. இவரது கூரை வீடு இரு தினங்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதம் அடைந்தது. இதனை அறிந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட தீபாவை நேரில் சந்தித்து நிதி உதவியும் நிவாரண பொருட்களையும் வழங்கி ஆறுதல் கூறினர்.
மயிலாடுதுறை மாவட்டம காவல்துறை சார்பில்
காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில்
மயிலாடுதுறை காவல்துறையினர்,
மயிலாடுதுறை நகரில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அணிவகுப்பு நடத்தினர்.
மயிலாடுதுறை காவல் நிலையத்தை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் காவலர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு மயிலாடுதுறை மக்களிடையே பாராட்டை பெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக செயலாளராக பண்ணை சொ.பாலு என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள பண்ணை பாலு மயிலாடுதுறை நகர செயலாளராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதாவை, இன்று மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வழுவூர் விஜி.கே.மணி, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நேரில் சென்று சந்தித்து ரயில் நிலையம் தொடர்பான கட்டுமான பணி உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பி சிறப்பாக செயல்படுவதற்காக வாழ்த்துக்கள் கூறினார்.
கீழப்பெரும்பள்ளத்தில் உள்ளது நாகநாதர் கோயில். நவகிரகங்களில் ஒருவரான கேது பகவான் மனித உடலும், பாம்பு தலையும் கொண்டவர். பார்கடலை கடைய உதவிய வாசுகி பாம்பு தன் பாவம் போக்க சிவபெருமானிடம் வேண்ட, வாசுகி பக்தியை கண்டு நாகநாத சாமி எனும் பெயரில் இக்கோயிலில் மூலவராக உள்ளார். நாக தோஷம் நீங்க இவரை வழிபடுவது சிறப்பு. இவருக்கு கொள்ளு வைத்து வழிபட்டால் தீரா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. SHARE செய்யவும்
மயிலாடுதுறையில் கடந்த 2003 ஆம் ஆண்டு தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்த ஏழுமலை என்பவரிடம் ராமமூர்த்தி கடனுக்கு பழங்கள் கேட்டுள்ளார். ஏழுமலை பழங்களை கொடுக்க மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இந்த வழக்கு மயிலாடுதுறை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ராமமூர்த்திக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி கவிதா நேற்று உத்திரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அபிநாத் (20) கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அபிநாத் மீது ஏற்கனவே 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதால் அபிநாத்தை எஸ்.பி.ஸ்டாலின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.