Mayiladuthurai

News April 13, 2024

மயிலாடுதுறையில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நாகை மாவட்ட செயலாளர் கொற்றவமூர்த்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களை சந்தித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பாமக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News April 13, 2024

மயிலாடுதுறையில் தபால் ஓட்டு செலுத்திய எஸ்பி

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தனது வாக்கினை தபால் ஓட்டு மூலம் இன்று பதிவு செய்தார். அப்போது, தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு காவல் அதிகாரிகளும் தங்களது வாக்கினை செலுத்தினர்.

News April 13, 2024

வயலில் பயிர் செடி எடுத்து வாக்கு சேகரித்த வேட்பாளர்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு சீர்காழியில் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் உள்ள வீடுகளுக்கு சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அங்குள்ள வயலில் பயிர்செடி எடுத்து விவசாயிகளிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். மகளிர் அணி செயலாளர் சக்தி நகர தேர்தல் பொறுப்பாளர் மார்கோனி உடன் இருந்தனர்.

News April 13, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் உத்தரவு

image

மயிலாடுதுறையில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 17 அன்று காலை 10 மணி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மற்றும் எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதி முழுவதும் டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடுவதற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும் உத்தரவினை மீறி செயல்படும் கடை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

News April 13, 2024

மயிலாடுதுறையில் மாபெரும் தூய்மை பணி

image

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட சித்தர்காடு பகுதியில் உள்ள பனந்தோப்பு தெரு, பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாபெரும் தூய்மை பணி இன்று நடைபெற்றது. தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர் மா.ரஜினி அறிவுறுத்தலில் நடைபெற்ற தூய்மை பணியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சாலையோரம் மண்டிக்கிடந்த புதர்களை அகற்றி குப்பைகளை சுத்தம் செய்தனர்.

News April 13, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் 13 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் தகவல் சீட்டு வழிகாட்டுதலுக்கு மட்டுமே பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

மயிலாடுதுறை: கல்லூரி மாணவிக்கு நிதி உதவி

image

சீர்காழி லயன்ஸ் சங்கம் சார்பில் நகரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு நேற்று விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட கல்லூரி மாணவி ஒருவருக்கு சிகிச்சைக்காக ரூ.11000 நிதி உதவி வழங்கினர். லயன்ஸ் சங்கத் தலைவர் சந்துரு தலைமையில் செயலாளர் சரவணகுமார், பொருளாளர் ஆரிப் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் மாணவிக்கு நிதி உதவி அளித்தனர்.

News April 13, 2024

மயிலாடுதுறையில் காலை 10 மணிக்குள் மழை

image

மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

மயிலாடுதுறையில் ஒதுக்கீடு

image

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் நுண் பார்வையாளர்கள் ஈடுபட உள்ளனர். இதனிடையே தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக சட்டமன்ற தொகுதி வாரியாக முதல்கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் முறை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பார்வையாளர் கன்ஹீராஜ் ஹச் பகத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News April 12, 2024

மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க தயார்

image

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் நேற்று சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வனத்துறையினர் சிறுத்தை தொடர்பாக தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் , தகவல்களை மயிலாடுதுறை மற்றும் அரியலூர் வனத்துறையினர் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க இரு அணியினரும் தயார் நிலையில் உள்ளதாக நாகை வன உயிரின காப்பாளர் இன்று கூறியுள்ளார்.

error: Content is protected !!