India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மங்கைமடத்தில் 2 சிறுவர்களை இன்று தெருநாய் கடித்ததில் காயமடைந்த தர்ஷன் (8) தர்ஷார்த் (4) இரண்டு சிறுவர்களையும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தெரு நாய்கள் அச்சுறுத்தல் காரணமாக வெளியில் நடமாட முடியவில்லை என மங்கைமடம் பொதுமக்கள் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.மேலும் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது சில இடங்களில் மிதமான கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும் அறிவுறுத்தபட்டது.
மயிலாடுதுறையில் அறம் செய்ய அறக்கட்டளையின் தலைவரும் , காவலருமான சிவா அவர்களின் பிறந்தநாள் விழாவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பங்கேற்று பிறந்தநாள் வாழ்த்துக்களை நேற்று தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது ஏராளமான முக்கியஸ்தர்கள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த முதியவர் ராஜா ராமன் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை தின்றுவிட்டு மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று இரவு முதல் மயிலாடுதுறையில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கடலோர டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவும், மின்தடை பாதிக்கப்படும் எனவே பொதுமக்கள் பாதுக்காக்க இருக்க வேண்டும் என்று காவல் துறை அறிவித்துள்ளது
மயிலாடுதுறையில் வானிலை ஆய்வு மையம் 19.05.24 வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 16.5.24 இரவு முதல் மயிலாடுதுறையில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கடலோர டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழவும், மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை உட்பட 9 பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறையில், சைவ குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற தலமாக உள்ளது திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில். இது நவகிரகங்களில் புதன் தலமாக உள்ளது. பல தொன்மையான புராணக் கதைகளைக் கொண்ட இக்கோயில், 1000 -2000 ஆண்டுகளுக்கும் பழமையானதாக உள்ளது. இங்கு சிவனின் 64 வடிவங்களில் 43 ஆவது வடிவமான அகோரமூர்த்தியாக காட்சித் தருகிறார். புதனை அதிபதியாக கொண்ட ராசிக்காரர்கள் இத்தலத்தில் வழிபடுவது வழக்கமானதாகும்.
சீர்காழி அருகே நெப்பத்தூரை சேர்ந்தவர் ஞானசேகரன். அவரது மனைவி தமிழரசி. இவர்கள் நேற்று தங்களது 3 வயது மகனுடன் முல்லையாம்பட்டினம் கிராமத்தில் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுவனை அவ்வழியாக வந்த தெரு நாய் கடித்துள்ளது. சிறுவனை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.