Mayiladuthurai

News June 20, 2024

கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக ஆலோசனை

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தஏ.பி.மகாபாரதி தலைமையில் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News June 20, 2024

மயிலாடுதுறை அருகே போஸ்டரால் பரபரப்பு 

image

சீர்காழி அருகே சங்கிருப்பு கிராமத்தின் குறுக்கே சுமார் 750 ஏக்கர் விவசாய இடங்களுக்கு செல்வதற்கு வழி இல்லாமல் nh45ஏ நெடுஞ்சாலை அமைப்பது கண்டித்து சிதம்பரம் நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாவடி முக்கூட்டு பகுதியில் விவசாயிகள் மற்றும் கிராமவாசிகள் சார்பில் நாளை காலை 10 மணி அளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.இவை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News June 20, 2024

மயிலாடுதுறை அருகே ஒன்றிய குழு கூட்டம்

image

சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் ஒன்றிய தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை தலைவர் பானு சேகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது பகுதி குறைகள் மற்றும் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

News June 19, 2024

ஊக்கத்தொகை வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்

image

திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீன மேனிலைப் பள்ளியில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இன்று (19.06.2024) பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் அருட்பரிசு வழங்கினார்.

News June 19, 2024

மயிலாடுதுறை அருகே பல இடங்களில் மின்தடை 

image

சீர்காழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று இடி மின்னலுடன் சுமார் அரை மணி நேரம் மழைபெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் தென்னை மட்டைகள் விழுந்து பாதிப்பு ஏற்பட்ட பாதிப்பால் சட்டநாதபுரம், கொள்ளிடம், மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஐந்து மணி நேரம் வரை மின்வினியோகம் தடைப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

News June 19, 2024

மயிலாடுதுறை:அமைச்சரை சந்தித்த மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பினர்

image

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக பேராசிரியர் ஜெயராமன், மகேஸ் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கூறைநாடு PM.பாசித், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் O.ஷேக் அலாவுதீன் உள்ளிட்ட குழுவினர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களை சந்தித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மீத்தேன் சுற்றுச்சூழல் நிலத்தடி நீர் மாசுபடுதல் குறித்து கோரிக்கைகளை முன் வைத்தனர்.

News June 18, 2024

வே2நியூஸ் செய்தி எதிரொலி: குத்தாலத்தில் மின்கம்பம் அமைப்பு

image

குத்தாலம் ஒன்றியம் கடலங்குடி ஊராட்சி கடலங்குடி ரெட்டியார் தெருவில் மின்கம்பம் ஒன்று மிகுந்த அளவில் சிதலமடைந்து காணப்பட்டது. இது தொடர்பான செய்தி வே2நியூஸ் ஆப்பில் கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மின்சார வாரியம் மூலம் சிதிலமடைந்த மின்கம்பம் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மின்கம்பம் நடப்பட்டது.

News June 18, 2024

மயிலாடுதுறை: குற்றவாளி தற்கொலை முயற்சி

image

மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ் ஆபாச விடியோவை காட்டி பணம் பறித்த வழக்கில் மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை பிரகாஷ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மேலும் எஸ்பி மீனா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பிரகாஷை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டிருப்பது   குறிப்பிடத்தக்கது.

News June 17, 2024

மயிலாடுதுறையில் நாளை மின் நிறுத்தம்

image

மயிலாடுதுறை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட டவுன் – 1 மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை ஜூன் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பட்டமங்கலம் தெருவில் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நீடூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கங்கணம்புத்தூர் பகுதியில் மட்டும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

News June 17, 2024

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

image

சீர்காழியை அடுத்த சீனிவாசா சுப்பராய அரசினர் பல் தொழில்நுட்பக் கல்லூரியில் 1991 – 94ஆம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நேற்று முத்து விழா கூட்டமாக நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், படித்த வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

error: Content is protected !!