Mayiladuthurai

News June 22, 2024

மயிலாடுதுறையில் ”டிஜிட்டல் திரை”

image

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் பகுதியில் ரயில்களின் விபரம் உள்ளிட்டவற்றை காட்டும் ”டிஜிட்டல் திரை” கடந்த சில மாதங்களாக சரிவர இயங்கவில்லை என பயணிகள் இன்று குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிஜிட்டல் திரைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக அதனை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News June 22, 2024

மயிலாடுதுறை அருகே 2பேர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட முருக மங்கலம் பழவாற்றாங்கரையில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் விற்பனையில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் நல்லாதடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன் ஆகியோரை குத்தாலம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

News June 22, 2024

மயிலாடுதுறையில் ஆலோசனை

image

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.ஷபீர் ஆலம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சியின் முகமை செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News June 22, 2024

மயிலாடுதுறை ஆட்சியரிடம் மனு வழங்கல்

image

கள்ளச்சாராய விற்பனையை முழுவதுமாக தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆட்சியர் மகாபாரதியிடம் இன்று மனு வழங்கப்பட்டது. தொடர்ந்து சங்கத்தின் மாநில செயலாளர் சிங்காரவேலன் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து இந்த மனுவினை வழங்கினர்.

News June 22, 2024

மயிலாடுதுறை:காவல்துறை புகார் எண் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போதை பொருட்கள் வைத்திருப்பது,விற்பனை செய்வது,கடத்துவது உள்ளிட்ட தகவல்களை 9626169492 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாராக தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தகவல் அளிப்பவர் விவரம் பாதுகாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News June 22, 2024

கோயில் திருவிழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

சீர்காழி அருகே புதுப்பட்டினம் காவல் சரக்கத்திற்குட்பட்ட கொட்டாய்மேடு கிராமத்தில் அருள்மிகு கோட்டைச்சாமி கோவில் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் காவல் ஆளுநர்கள் சிறப்பு காவல் படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 150 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

News June 22, 2024

மயிலாடுதுறை: மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்புக்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நாளை மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை சார்பில் காலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என தனி தனிபிரிவாக நடைபெறும் இப்போட்டியில் அனைவரும் பங்கேற்கும் படி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News June 21, 2024

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தால் உடனடியாக ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 மற்றும் 7092255255 என்ற whatsapp எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

மயிலாடுதுறையில் வேலை வாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப் ஆகியவை இணைந்து நடத்தக்கூடிய குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 9 மணிக்கு துவங்கி நடைபெற உள்ள இந்த முகாமில் இளைஞர்கள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News June 20, 2024

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது

image

மயிலாடுதுறையில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீர்காழி அருகே உமையாள்பதி கிராமம் கீழத் தெருவை சேர்ந்த ராமு மகன் ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் இன்று சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!