India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குத்தாலம் வட்டாரத்தில் கங்காதாரபுரம், பருத்திக்குடி, கோனேரிராஜபுரம், சிவனாரகரம், நக்கம்பாடி, மாந்தை ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி ஸ்ரீகண்டபுரம் காரனுர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்
மயிலாடுதுறையில் இருந்து தினசரி காலை 8.05 மணிக்கு திருச்சி செல்லக்கூடிய ரயில் இன்று முதல் மெமு வண்டியாக மாற்றப்பட்டு இயங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று(அக.06) தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயங்கி வந்த நிலையில் தற்போது 8 பெட்டிகள் மட்டுமே இருக்கக்கூடிய மெமு ரயிலாக இயக்கப்பட உள்ளது.
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா நேற்று(ஆக.06) மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்தார். தொடர்ந்து மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு தேவையான ரயில்வே தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அமைச்சரிடம் வழங்கினார். பின்னர் சிறிது நேரம் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.
பெங்களூரில் இருந்து ஆகஸ்ட் இன்று முதல் 9 மற்றும் 11-ம் தேதிகளில் புறப்படும் காரைக்கால் விரைவு ரயில், மயிலாடுதுறை வழியாக காரைக்கால் வரை செல்லும் இந்த ரயில், விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேபோல் காரைக்காலில் இருந்து பெங்களுர் வரை செல்லும் பெங்களுர் விரைவு இரயில் 7 முதல் 10-ம் தேதி மற்றும் 12 தேதி வரை விருத்தாச்சலத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூரு வரை மட்டுமே செல்லும்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் , கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறையில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சின்னக்கடை வீதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பாலின் மகிமை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மருத்துவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து 40 பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன.
சென்னை எழும்பூரில் இருந்து தினசரி இரவு 9 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை மார்க்கமாக காரைக்கால் செல்லும் விரைவு ரயில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 85 நிடங்கள் தாமதமாக இரவு 10.25 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே இன்று தெரிவித்துள்ளது. எனவே மயிலாடுதுறை ரயில் பயணிகள் ரயிலின் நேரத்தை சரிபார்த்து பயணம் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கொள்ளிடம் அருகே உள்ள கரையோர கிராமங்களான முதலைமேடு, சந்தப்படுகை, வெள்ளமணல் பகுதிகளை சேர்ந்த வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. 3-ஆம் நாளான நேற்று அணைக்கரையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 70,148 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் கரையோர கிராமங்களை சூழ்ந்த வெள்ள நீரானது நேற்று வடிய தொடங்கியது.
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் திரு சி.வீ.மெய்யநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜ்குமார் மற்றும் பன்னீர்செல்வம் , நகர மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.