Mayiladuthurai

News June 27, 2024

மயிலாடுதுறை கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று(ஜூன் 26) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், மதியம் முகாம் அலுவலகம் சென்றவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News June 26, 2024

குற்றவாளியை கஸ்டடியில் எடுத்து விசாரணை

image

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளி செந்திலை 15 நாட்களுக்கு பிறகு மயிலாடுதுறை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மயிலாடுதுறை நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்து இருந்தனர். இதனிடையே மனுவை விசாரித்த நீதிபதி ஒருநாள் விசாரணைக்கு அனுமதி அளித்ததை அடுத்து போலீசார் செந்திலை இன்று காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News June 25, 2024

மயிலாடுதுறை எம்பி ஆனார் சுதா

image

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதா இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுதா, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

News June 25, 2024

சீகன்பால்க் நினைவாக மணிமண்டபம்: முதல்வர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் சீகன்பால்க் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்ட சபையில் தமிழக முதல்வர் நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில் சீகன்பால்க் என்பவர் தான் முதல் முதலில் தமிழ் மொழிக்கு அச்சு இயந்திரம் கொண்டு வந்தவர் ஆவார். இவர் ஓலைச்சுவடிகளில் இருந்து பல்வேறு நூல்களை அச்சு இயந்திரம் மூலம் மொழி பெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 25, 2024

மயிலாடுதுறையில் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கல்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டது. அப்போது பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News June 24, 2024

மயிலாடுதுறையில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம்

image

மயிலாடுதுறையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இலவச தையல் இயந்திரங்களை இன்று வழங்கினார். அப்போது கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம் , மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News June 24, 2024

மயிலாடுதுறை அலுவலர்களுக்கு உத்தரவு: ஆட்சியர்!

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரடியாக அவர்களது இருப்பிடத்திற்கு சென்று பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

News June 23, 2024

மயிலாடுதுறையில் மழை…!

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதையடுத்து மயிலாடுதுறையில் சுற்று வட்டாரப்பகுதியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்த நிலையில் இன்று மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News June 23, 2024

பாஜக மாவட்ட தலைவர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்

image

மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை உடனடியாக கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று(ஜூன் 23) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தெரிவித்துள்ளார். தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைதாகி சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளிவந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

News June 22, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் வேண்டுகோள்

image

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சரால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!