Mayiladuthurai

News June 12, 2024

மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை

image

மயிலாடுதுறை காவல் சரக பகுதியில் 16 வயது சிறுமியை உதயகுமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் உடனடியாக ரஞ்சித் என்பவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தில் உதயகுமார் , ரஞ்சித் ஆகிய இருவரை இன்று(ஜூன் 11) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News June 11, 2024

மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை

image

மயிலாடுதுறை காவல் சரக பகுதியில் 16 வயது சிறுமியை உதயகுமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் உடனடியாக ரஞ்சித் என்பவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தில் உதயகுமார் , ரஞ்சித் ஆகிய இருவரை இன்று(ஜூன் 11) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News June 11, 2024

மயிலாடுதுறையில் இருவர் மட்டுமே சேர்ந்துள்ள நகராட்சி பள்ளி

image

மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தற்போதைய(2024-2025) கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் தமிழ் வழியில் ஒரு மாணவரும் , ஆங்கில வழியில் ஒரு மாணவரும் என மொத்தமாக இரண்டு மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இது போன்ற பள்ளிகளை அரசு மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News June 11, 2024

மயிலாடுதுறை: அத்தியாவசிய பொருள் வழங்கல்

image

மயிலாடுதுறை திரு இந்தளூர் ஊராட்சியில் உள்ள பல்லவராயன் பேட்டையில் அமைந்துள்ள சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிட பள்ளியில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி மாணவ செல்வங்களுக்கு பல்வேறு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டது. திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்எல்ஏ வுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு வழங்கினார்.

News June 11, 2024

மயிலாடுதுறையில் நாளை ஜமாபந்தி துவக்கம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நாளை தொடங்கி ஜூன்-27 வரை நடைபெற உள்ளது. இதனை நடத்திட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் வேளாண், வேளாண்மை பொறியியல், தோட்டக்கலை, பொதுப்பணி நீர் வள ஆதாரம், மின்சாரம் ஆகிய துறைகள் சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

மயிலாடுதுறை:வருவாய் தீர்வாயம் நாளை தொடக்கம்

image

சீர்காழி தாலுகாவில் உள்ள கிராமங்களில் 1433 பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனும் ஜமாப் பந்தி நாளை 12ஆம் தேதி தொடங்கி ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமையில் வட்டாட்சியர் இளங்கோவன் முன்னிலையில் பல்வேறு கிராமங்களின் வரவு செலவு கணக்குகள் இந்த தீர்வாயத்தில் சரி பார்க்கப்படுவதோடு , கிராம மக்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு சான்றுகள் வழங்கப்படும்.

News June 10, 2024

நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்தவர்களின் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக 2022 – 23 ஆம் கல்வியாண்டில் 11,751 மாணாக்கர்களும், 2023 – 24 ஆம் கல்வியாண்டில் 24, 704 மாணாக்கர்களும் என மொத்தம் 36, 455 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News June 10, 2024

ராகுல் காந்தியை சந்தித்த மயிலாடுதுறை எம்பி

image

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா இன்று புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சுதாவிற்கு இளம் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றும்படி தெரிவித்தார்.

News June 10, 2024

மயிலாடுதுறையில் ரயில் பயணி மனு வழங்கல்

image

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் திருவாரூர் ரயில்வே லைனை அனைத்து நடைமேடையுடன் இணைப்பதற்காக 23 கோடி நிதியானது மாவட்ட நிர்வாகத்திடம் ரயில்வே துறை வழங்கியுள்ளது. தொடர்ந்து நிலமானது ரயில்வேயிடம் வழங்காமல் நிலுவையில் உள்ளதால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் பணிகளை விரைந்து துவங்க கோரி இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரயில் பயணிகள் மனு அளித்தனர்.

News June 10, 2024

மயிலாடுதுறை: மோடிக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

image

பிரதமராக மூன்றாவது முறையாக மோடி பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் நல்லாசிகளை வழங்கி வாழ்த்துக்களை இன்று தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த வாழ்த்து செய்தியினை முகநூலில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!