India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 18ஆம் தேதியும் , கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 19ஆம் தேதியும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. புனித சின்னப்பர் பள்ளியில் நடைபெற உள்ள இப்போட்டியில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் மகாபாரதி இன்று (ஜூலை 10) தெரிவித்துள்ளார்.
சீர்காழி அரசு இசை பள்ளியில் 4 வகையான நாட்டுப்புற கலைகள் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஜூன் 12 முதல் வழங்கப்பட உள்ளது. 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று (ஜூலை 9) தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 45 வயது வரையிலான பொது பிரிவினரும், 55 வயது வரை சிறப்பு பிரிவிலும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபார தொழில் செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் மகாபாரதி இன்று அறிவுறுத்தியுள்ளார். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை அக்னிவீர் வாயு இராணுவ ஆள் சேர்ப்பற்கான இணையவழி விண்ணப்ப பதிவு இன்று முதல் ஜூலை 28 ஆம் தேதி பிற்பகல் 11 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இணைய வழி விண்ணப்பத்தினை மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 03.07.2004 ஆம் ஆண்டு முதல் 03.01.2008 ஆண்டு வரை பிறந்த திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடலோர பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. எடமணல், திருமுல்லைவாசல், பழையார், தொடுவாய், திருவெண்காடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறையில் இன்று (ஜூலை 7) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தநிலையில், தற்போது மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (ஜூலை 8) பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக மனுக்கள் எழுதிக் கொடுப்பதற்கு தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 09.07.2024 அன்று காலை 09.30 மணிக்கு மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ மற்றும் மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 5 வட்டாரங்களிலும் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் 43 சிறப்பு முகாம்கள் ஜூலை 11ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து முகாம்களில் பங்கேற்று பயனடையுமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் இ-சேவை மூலம் பதிவு செய்யப்படும் மனுக்களுக்கு 50 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்படும் என ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் நெல் விதைகளும், 100 சதவீத மானியத்தில் உரம், பசுந்தாள் உர விதைகள், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல்,புகைப்படம், கைபேசியுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் நாட்டுக் கோழிகள் மற்றும் அதற்கான சலுகைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வருகின்ற ஜூலை 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.