Mayiladuthurai

News August 15, 2024

கண்தானம் செய்த அறக்கட்டளைக்கு ஆட்சியர் பாராட்டு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவில் கண் தானம் செய்த அறம் செய் அறக்கட்டளைக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று சுதந்திர தின விழாவில் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சான்றிதழை வழங்கி மேலும் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News August 15, 2024

கல்லூரி மாணவனை தாக்கிய ஐந்து பேர் கைது

image

மயிலாடுதுறையில் செல்போன் வீடியோ காலில் நண்பனிடம் மன்னிப்பு கேட்க வைத்து, ஐடிஐ மாணவனை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது. இதனை அடுத்து மாணவனை தாக்கிய 5 பேரை கைது செய்து, மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் குற்றவாளிகள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால் நாகப்பட்டினம் சிறார் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.

News August 14, 2024

மூவர்ண நிறத்தில் ஜொலித்த ஆட்சியர் அலுவலகம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூவர்ண தேசியக்கொடி நிறத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இன்று ஜொலித்தது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

News August 14, 2024

மயிலாடுதுறை ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற எஸ்பி

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கோ. ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ?

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

இளைஞர் உயிரிழப்பு: ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு

image

மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பாலம் கட்டுமான பணியில் விழுந்து கம்பி சொருகி இளைஞர் மணிகண்டன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் தந்தை இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து நபர்கள் மீது இன்று பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே உதவி திட்ட மேலாளர் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

News August 14, 2024

மயிலாடுதுறை இளைஞர் உயிரிழப்பு: மேலாளர் கைது

image

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டுமான பணியின் போது பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மணிகண்டன் வாகனத்துடன் விழுந்து கம்பி குத்தி உயிரிழந்த விவகாரத்தில் (டெப்டி ப்ராஜெக்ட் மேனேஜர்) ஓம் சக்தி கான்சன்ட்ரேஷன் ஒப்பந்த நிர்வாகத்தின் திட்ட உதவி மேலாளர் நாகராஜன் என்பவரை பெரம்பூர் போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 14, 2024

மயிலாடுதுறையில் நாளை மதுக்கடைகள் மூடப்படும்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் FL1/FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் நாளை சுதந்திர தினம் அன்று தற்காலிகமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் நாளை விற்பனை இல்லாத நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

News August 14, 2024

மரகத பூஞ்சோலை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

image

சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மரகத பூஞ்சோலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, திமுக மாவட்ட கழக செயலாளர் நிவேதா முருகன் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி, மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 14, 2024

மயிலாடுதுறையில் இளைஞர் பரிதாப பலி

image

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தகுடியில் பாலம் கட்டுமானத்திற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழந்தார். பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த மணிகண்டன் தலையில் கம்பி குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலம் கட்டுமானப் பணி பாதுகாப்பு தடுப்புகள் இன்றி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!