Madurai

News December 15, 2024

பெற்றோரை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

image

மதுரை அருகே பாலமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(28). திருமணம் ஆகாத நிலையில், அவரது தாய், தந்தை சமீபத்தில் இறந்த நிலையில் தனித்து வாசித்து வந்தார். இதனால் மதுவிற்கு அடிமையான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலமேடு போலீசார் இவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

News December 15, 2024

மதுரையில் இபிஎஸ்-க்கு எதிராக புதிய வழக்கு

image

மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், வக்கீல் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே. சி. சுரேன் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில்,” அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் ” ” எனக் கேட்டு புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 15, 2024

சோழவந்தானில் கூலி தொழிலாளி கொலையில் பெண் கைது

image

மதுரை சோழவந்தான் முள்ளிப்பள்ளத்தில் கூலித்தொழிலாளி கணேசன் 45 கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கழுத்தறுக்கப்பட்டு வீட்டில் உயிரிழந்து கிடந்தார் இவருக்கு மகன் மகள் உள்ளனர் இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவருடன் பழகி வந்த பாண்டியம்மாளுடன் 35 ஏற்பட்ட தகராறில் கணேசனை கொலை செய்ததாக தெரியவந்தது. இதனால் போலீசார் பாண்டியம்மாளை கைது செய்தனர்.

News December 15, 2024

மதுரை சிறையில் ஊழல் பெண் எஸ்பி உட்பட 11 பேர் மீது வழக்கு

image

மதுரை மத்திய சிறையில் கைதிகளை கொண்டு மருத்துவ பேண்டேஜ் , ஆபிஸ் கவர்கள் உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2016 முதல் 2021 வரை கண்காணிப்பாளராக ஊர்மிளா இருந்தார். மூலப்பொருட்கள் பல்வேறு வர்தகர் மூலம் பெறப்பட்டன. சில நிறுவனங்கள் பொருட்கள் வழங்கியதாக போலி பில்களை சிறை நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளன. இதில் ஊர்மிளா உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News December 15, 2024

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று(14.11.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News December 14, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று(டிச.14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 14, 2024

200 ஆண்டுக்கு பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா தீபம்

image

பேரையூர் மேலப்பரங்கரி சுப்பிரமணிய சுவாமி கோவில் சரவண பொய்கை மலை மீது நேற்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.மலைமீது பழமையான மல்லிகா அர்ஜுனா லிங்குசாமி கோயில் உள்ளது. நான்கரை அடி தீபக் கொப்பரையில் இந்த மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தினை பேரையூரை சுற்றியுள்ள பகுதி மக்கள் வீட்டு மாடியில் இருந்து தரிசனம் செய்தனர். 200 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மகா தீபம் ஏற்றப்பட்டது.

News December 14, 2024

மதுரையில் டிச.21ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

image

மதுரை நகர் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 51 வாகனங்கள் டிச.21 காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.பங்கேற்க விரும்புவோர் முன்பணமாக டூவீலருக்கு ரூ.5000, மூன்று, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரத்தை டிச.17 முதல் 19 வரை மதுவிலக்கு அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

News December 14, 2024

மதுரை மாநகர இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம் வெளியீடு

image

மதுரை மாநகர இரவு ரோந்து பணி(டிச.13) காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியீடு தெற்கு வாசல் கோவில். தெற்கு வாசல், அவனியாபுரம், திடீர் நகர், திலகர் திடல்,  செல்லூர், அண்ணா நகர், போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி காவலர்களின் பட்டியல் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது.

News December 13, 2024

மதுரை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று(டிச.13)  இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!