India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் நாளை காலை 9 முதல்மாலை 5 மணி வரை பழங்காநத்தம், பெரியார்நகர், புதுக்குளம், பைகாரா, பசுமலை, விளாச்சேரி, திருநகர், நேதாஜிதெரு, பொன்மேனி, திருப்பாலை, ஊமச்சிகுளம், குலமங்கலம், கடச்சனேந்தல், ஆனையூர்,பனங்காடி,உசிலம்பட்டி,வலைபட்டி,சிந்துபட்டி, குளத்துப்பட்டி, செக்கானுாரணி, கொக்குளம், கீழவளவு, டி.கல்லுபட்டி,குளமங்கலம், சாத்தமங்கலம், சிவரகோட்டை,உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டம் முழுவதும் மின்தடை
மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு: மாநகரில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான கால கட்டங்களில் மாநகரில் உரிமை கோரப்படாத இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஏலம் நடத்தி விற்பனை செய்யப்படும் என்பது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாகனத்தை இழந்த பொதுமக்கள் இந்த அறிவிப்பை பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மதுரையில் இன்று(டிச.18) காலை 10:30 மணிக்கு காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்களை தவறவிட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் மூலமாக செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை திரும்ப உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி காவல் ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமும் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா எதிர்வரும் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சமீபத்தில் சட்டபேரவையில் உறுதியளித்ததற்காக மீனாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரான அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல் ராஜன் குடும்பத்தினருடன் முதல்வரை இன்று (டிச.17) நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் இன்று (டிச.17) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர நேரத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரையில் இன்று (டிச.17) செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன்; பாஜக அதிமுகவை அழிக்க வேண்டும் என நினைக்கவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணமாக இருக்கிறது. 2026-ல் வெற்றி பெறுவோம் என இபிஎஸ் நம்பிக்கையாக கூறுவது போல தெரியவில்லை, மூடநம்பிக்கையுடன் பேசுவது போல தெரிகிறது என்றார்.
மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் உடல் ஒன்று கிடப்பதாக தெப்பக்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்து.
இதனையடுத்து 25 வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவரின் உடலை மீட்ட தெப்பக்குளம் போலீசார் மீட்டனர். தெப்பக்குளத்தில் மூழ்கி இறந்தது யார்? போலீசார் வி.ஏ.ஓவிடம் புகாரை பெற்று தற்கொலையா, வேறு காரணமா என அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் உள்ளூர் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களில் “ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” விற்பனையகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த ஊர் தயாரிப்புகளை எளிதில் வாங்கும் வகையில் நடைமேடைகளில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் முறை அறிமுகமாகியுள்ளது.மதுரையின் பொருளான “மல்லிகை” மாலையாக, சரமாக மதுரை ரயில் நிலைய நடை மேடைகளில் தள்ளுவண்டிகள் மூலம் தற்போது விற்பனையாகிறது.
மதுரை மக்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த போக்குவரத்து காவல்துறைமதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிய மேம்பாட்டிற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. கோரிப்பாளையம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்களின் வசதிக்கேற்ப மூன்று பாதைகளை மாற்றி அமைத்து இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Wilderness Experience Corporation, வனத்துறை இணைந்து மலை ஏற்றத்தை ஊக்குவிக்க ‘Trek Tamilnadu’ என்ற திட்டம் உள்ளது. இதற்கு மதுரை குட்லாடம்பட்டி தடாகை மலையேற்ற பாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு மலை ஏற்றம் வனத்துறை அலுவலர்களின் உதவியோடு நடைபெறும். தகவல் அறிய https://www.trektamilnadu.com/ இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.