India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பேரையூர் வட்டம் மள்ளப்புரம் கிராம உட்கடை M.S.புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் இன்பராஜ் (28) என்பவர் லடாக்கில் இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று மதியம் ராணுவ வண்டியில் பயணம் செய்த போது வண்டி உருண்டு விபத்து ஏற்பட்டு இறந்து விட்டார் .இறந்தவருக்கு திருமணமாகி 1 வருடமாகிறது. இறந்தவரின் உடல் நாளை மறுநாள் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் உள்ள உலக புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில், நடை பெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவில் ஒன்றான அஷ்டமி சப்பர விழா நாளை (டிச. 23) நடைபெற உள்ளது. இதில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்ற நிலையில், அதற்கான விரிவான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், மதுரை மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து இன்று தீவிரமாக செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் இன்று (22.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளி வீதிகளில் நடைபெறும் “அஷ்டமி அஷ்டமி சப்பர திருவிழா” நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் தற்போது நடைபெற்று வருகிறது, தேர் செல்லும் சாலைகள், தேர் செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
மதுரை சிறையில் உதவி ஜெயிலராக இருப்பவர் பாலகுருசாமி. இவர் முன்னாள் கைதி நடத்தி வரும் டிபன் சென்டர்க்கு, அடிக்கடி செல்வர். கைதியின் 2வது மகளின் 14 வயது மகளுக்கு பாலகுருசாமி, போனில் பேசுமாறு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமியை சந்தித்த அவர், ரூ.500 கொடுத்து, பாலியல் ரீதியாக பேசிக் கொண்டிருந்த போது, மறைவாக காத்திருந்த சித்தி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செருப்பால் அடித்தார்.
மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலராக பணியாற்றி வரும் பாலகுருசாமி சிறை கைதியாக இருந்தவரின் மகள், பேத்திக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அவரது உறவினர் நடு ரோட்டில் வைத்து கடுமையாக தாக்கினார். இது தொடர்பான வீடியோ வெளியாகியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகார் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமியை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவு.
மதுரை மாவட்டத்தில் இன்று (21.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர நேரத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை ஐஓபி வங்கியில் கடந்த 2007ல் போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ.2.42 கோடி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விசாரணை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி எஸ்.சண்முகவேல் நேற்று தீர்ப்பளித்தார். அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் அம்மமுத்து, வங்கி தலைமை மேலாளர் பாலசுப்ரமணியன், மகாலிங்கம் ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமான டிக்கெட்டின் விலை 5 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
சென்னை – மதுரை விமான டிக்கெட் கட்டணம் ரூ.4,300-ல் இருந்து ரூ.17,695 ஆக உயர்ந்துள்ளது. இதனால் விமான பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள CITIIS 2.0 ENVIRONMENTAL & SOCIAL SAFEQUARDS NODAL OFFICER -1, PUBLIC ENGAGEMENT OFFICER பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனமசெய்ய 45 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பதவிகளின் பணி விவரம், கல்வித்தகுதி, முன் அனுபவம் மற்றும் இதர விபரங்கள் மதுரை www.maduraicorporation.co.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
Sorry, no posts matched your criteria.