India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி காலிபணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசிநாள் நாளை(பிப்.14).
<<-1>>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணபிக்கவும் * ஷேர்
மதுரையில் 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. ஆர்.டி.ஓ மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மூலம் மாவட்டத்தில் பஸ் சேவை இல்லாத பகுதிகளை கண்டறிந்து அங்கு வருகின்றனர். அந்த வகையில் புதிதாக 41 வழித்தடங்களுக்கு மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழித்தடத்தில் பஸ் இயக்க விருப்பமுள்ளோர் ‘பாரிவாகன்’ இணையதள போர்ட்டல் மூலம் ரூ.1600 கட்டணம் செலுத்தி, பிப்.24க்குள் விண்ணப்பிக்கலாம்.
மதுரையில் இன்று 13ஆம் தேதி புதிய டைடல் பூங்காவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொளி மூலமாக அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருந்த நிலையில் இவ்விழாவானது வரும் பிப்.18ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா சுமார் 9.97 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.289 மதிப்பீட்டிலும், திருச்சியில் 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.315 மதிப்பீட்டிலும் டைட்டல் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் (Project Assistant)திட்ட உதவியாளர் பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. M.Sc தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணபிக்க கடைசிநாள் 25.02.2025. தகுதியான நபர்களுக்கு Rs.25,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. *<
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மாசி திருவிழா சுமார் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவாகும். இந்த திருவிழாவில் விநாயகர், முருகன், முதல் மூவர், சந்திரசேகர் என ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக திருவிழா நடைபெறும். இவ்வளவு சிறப்புவாய்ந்த மாசி மண்டல திருவிழாவின் கொடியேற்றம் இன்று(வியாழக்கிழமை) காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை மாநகரில் இன்று (பிப்.12) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மதுரையில் நாளை 13ம் தேதி புதிய டைட்டல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இந்த டைடல் பூங்கா சுமார் 9.97 ஏக்கர் நிலப்பரப்பில் ₹289 கோடி மதிப்பீட்டிலும், திருச்சியில் 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் ₹315 கோடி மதிப்பீட்டிலும் டைட்டல் அமைய உள்ளது. இதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையில் 2011ல் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு தவறுதலாக நைட்ரஜன் ஆக்ஸைடு பயன்படுத்திய விவகாரத்தில் 6 மருத்துவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. மருத்துவர்களின் ஜாமீன் மனு மீதான வழக்கை இன்று (பிப்.12) விசாரித்த நீதிபதிகள், மருத்துவர்கள் பொறுப்புடன் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும் வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் இன்று (பிப்.12) இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், ஊமச்சிகுளம் ஆகிய காவல் சரகங்களில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் ரூ.88 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ‘வான்வழி கட்டுப்பாட்டு தொழில்நுட்ப மையம்’ இன்னும் 3 மாதங்களில் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தொழில்நுட்ப கோபுரத்தின் மூலம் பயணிகளின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும். அதிக விமானங்களை விரைவாக கையாளுவதிலும் சிரமம் இருக்காது எனவும் விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.