India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மாவட்டம், டெல்டா மாவட்டங்களில் மார்ச் 1 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் சாய் குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என அறிவிப்பு.
வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதித்து மதுரை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மாடு வளர்க்க ரூ.500 கட்டணம், குதிரை வளர்க்க ரூ.750 கட்டணமும், ஆடு வளர்க்க 150 ரூபாயும் பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணமும் நாய், பூனை வளர்க்க 750 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்,மதுரை விமான நிலையம் தொடர்பாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மதுரை விமான நிலையத்துக்கு வாரம்தோறும் 140 விமானங்கள் வந்து செல்வதாகவும், ஒரு மணி நேரத்தில் மதுரை விமான நிலையத்தில் 700 பயணிகளை கையாள்வதாகவும், வருடத்திற்கு 15 லட்சம் பயணிகள் மதுரை விமான நிலையம் மூலமாக பயணம் செய்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயதில் இருக்க வேண்டும். மாதம் ரூ. 15000 வழங்கப்படும். விரும்புவோர் மார்ச் 5ஆம் தேதிக்குள் <
மதுரையில், மூளைச்சாவு அடைந்த ஒருவரது இதயம் கோவை மருத்துவமனையில் அனுமதித்துள்ள நோயாளி ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து காலை 10:30 மணிக்கு, இதயத்துடன் ஆம்புலன்ஸ் கிளம்பியது. மதுரை, திண்டுக்கல், திருப்பூர் என, மூன்று மாவட்டங்களைக் கடந்து, கோவைக்கு மதியம், 1:15 மணிக்கு, அதாவது 2 மணி, 45 நிமிட நேரத்தில் இதயம் கொண்டு வரப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மதுரை ஆதீனம் மடம் அமைந்துள்ளது. இன்று அவர் வெளியிட்ட கடிதத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்ததேசிகர் பிறந்த வாழ்த்து தெரிவித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து, பழனியின் முத்தமிழ் மாநாடு கண்ட முத்தமிழ் வேந்தனே, பல்லாண்டு வளர்க தங்கள் தமிழ் தொண்டு என்று குறியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் மாநில தலைமைச் செயலாளர் இறையன்பு மதுரை வந்துள்ளார். அவர் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் அடிக்கடி மதுரை வந்து செல்கிறார். அந்த வகையில், தற்போது மதுரை வந்த இறையன்புவை திருஞானம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியரும் எழுத்தாளருமான சரவணன் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
மதுரை கடச்சனேந்தல் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டியளித்தார். மதுரை நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை என்பதை தேர்தல் ஆணையம் ஒன்று உருவாக்கப்படாத நிலையில் எதன் அடிப்படையில் முதலமைச்சர் ஒரு பீதியை மக்களிடத்தில் கிளப்புகிறார். பத்திர பதிவுத்துறையில் பரகாசுரன் ஊழல் நடந்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மதுரை அமைச்சர் மூர்த்தியின் துறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 1 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர் கோபாலகிருஷ்ணன் – தமிழ்செல்வி தம்பதியர். தாங்கள் பிறந்த கீழையூர் கிராமம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நன்மை செய்ய வேண்டும்என்பதற்காக தங்களது நிலத்தை தானமளித்ததாக கூறினர். கோபாலகிருஷ்ணன்தம்பதியர்.இவர்களின் இந்த செயலை பாராட்ட நினைத்தால் Comment பண்ணி Share செய்யவும்.
மதுரை விமான நிலைய போக்குவரத்து குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம். அதன்படி, மதுரை விமான நிலையம் ஒரு மணி நேரத்திற்கு 700 பயணிகளையும், ஒரு ஆண்டிற்கு 1.50 மில்லியன் பயணிகளை கையாளுகிறது. மேலும், நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.