Madurai

News April 12, 2025

மதுரை அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி

image

செக்கானுாரணி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் 24, லாரி டிரைவர். இவர் நேற்று திண்டுக்கல் மதுரை 4 வழிச்சாலையில் டிப்பர் லாரியில் கற்கள் ஏற்றி வந்தார்.குலசேகரன்கோட்டை ஆஞ்சநேயா கோயில் அருகே வந்தபோது முன்பக்க லாரி டயர் வெடித்தது.லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் கிருஷ்ணன் இறந்தார்.போலீசார் விசாரிக்கின்றனர். டிரைவர்களுக்கு SHARE செய்து தினமும் லாரி எடுக்கும் முன் டயரை செக் பண்ண சொல்லுங்க.

News April 11, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (11.04.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News April 11, 2025

சித்திரை திருவிழா – வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

image

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று சித்திரைத் திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மே 12ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வைகை அணையில் இருந்து வரும் மே 8ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

News April 11, 2025

அனுப்பானடி: கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

image

மதுரை அனுப்பானடி, புது ராம்நாடு சாலையில் உள்ள கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அப்பகுதியின் விஏஓ கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின்னர் இறந்தது யார் இறப்புக்கான காரணம் என்ன என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகின்றனர்.

News April 11, 2025

முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.www.tn.gov.in என்ற இணையத்தில் மே மாதம் 3-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.தெரிந்தவர்களுக்கு SHARE செய்யவும்.

News April 11, 2025

கரடிக்கல்லில் லாரியை திருடி சென்ற கும்பல்

image

மதுரை மீனாம்பாள்புரம் நல்லதம்பி 44. ஆட்டு வியாபாரியான இவர் சொந்தமாக லாரி வைத்திருந்தார். ஏப்.,5ல் கரடிக்கல் அருகே உள்ள உறவினரின் பெட்ரோல் பங்க் பின்புறம் லாரியை நிறுத்தியிருந்தார். நேற்று லாரியை எடுக்க டிரைவர் மாரியப்பன் அங்கு சென்றபோது லாரி மாயமாகியிருந்தது. நல்லதம்பி புகாரில் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.லாரி வைத்திருப்போருக்கு SHARE செய்து கவனமாக இருக்க சொல்லுங்க.

News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

News April 11, 2025

ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை

image

மதுரை மேலூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் இவரது மனைவி அபிராமி 25. இவர் இரண்டாவது பிரசவத்திற்காக தாய் வீடான கொட்டக்குடிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அபிராமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் 108 ஆம்புலன்ஸ் அழைத்து மருத்துவமனைக்குசென்ற போது, செல்லும் வழியிலே பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் அபிராமிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.பிரசவத்தில் ஆம்புலன்சிலே ஆண் குழந்தை பிறந்துள்ளது.

News April 10, 2025

மதுரை புறநகர் பகுதி இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி,மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஏப்.10) இரவு 10 மணி முதல் அதிகாலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2025

வண்டியூர் மாரியம்மன் கோயிலின் ஐதீகம்

image

மதுரையின் காவல் தெய்வமாக வண்டியூர் மாரியம்மன் விளங்குகிறார். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த விஷேஷ நிகழ்ச்சி நடத்தினாலும், மாரியம்மனிடம் உத்தரவு கேட்ட பிறகே நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள தெப்பம் மதுரை வட்டாரத்திலேயே மிகப்பெரியது எனும் பெயரை பெற்றுள்ளது. தீராத வியாதி, குடும்ப பிரச்னை, தொழில் பிரச்னை, திருமணத் தடை நீங்க இங்கு வழிபட்டால் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம். Share.

error: Content is protected !!