Madurai

News March 15, 2025

வைகை, பல்லவன் ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி

image

மதுரை – சென்னை வைகை (12635/12636) மற்றும் சென்னை – காரைக்குடி பல்லவன் (12605/12606) விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப்பு (கோச்) இணைக்கப்படும். ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பின்படி, மே 11 முதல் இந்த மாற்றம் செயல்படுத்தப்படும். பயணிகளின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தீர்வு, அதிக கூட்ட நெரிசலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணங்களை திட்டமிடலாம்.

News March 15, 2025

மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

image

மதுரை வில்லூர் ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன் (50). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இருளாயி (9) என்ற மகள் இருந்தார். கடந்த 2018ல் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து அவ்வப்போது தனது தாய்வழி தாத்தாவிடம் தெரிவித்தாக மகள் இருளாயியை அவரது தந்தை முருகன் கோடாரியால் தாக்கி கொலை செய்தார். இவ்வழக்கில் தந்தை முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 14, 2025

மதுரை மாநகராட்சிக்கு 5 கோடி :புதிய அறிவிப்பு  

image

மதுரை மாநகராட்சி உட்பட தமிழகம்  முழுவதும் இருக்கக்கூடிய 30 மாநகராட்சி பகுதிகளில் 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய  நூலகம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நூலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது .

News March 14, 2025

மதுரை :குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

image

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது . அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2025-ல் நடத்தப்படவுள்ள  குரூப்-4 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வரும் 17 தேதி முதல் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருப்பதால் விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம்.

News March 14, 2025

மதுரையில் வேலைவாய்ப்பு 

image

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் தமிழ் ஏஐ ஆராய்ச்சி திட்டத்திற்கான ஆராய்ச்சி இணை பணியிடம் காலியாக உள்ளது.  M.E (CSE), M.Tech (IT), MCA, M.Sc (Comp. Sci). AI/ML/DL/NLP தொடர்பான தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை www.tce.edu என்ற பக்கத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பம் செய்யலாம் . விண்ணப்பிக்க கடைசி நாள் 30.03.2025. மற்றவர்களுக்கும்  ஷேர் செய்து உதவுங்கள் 

News March 14, 2025

மதுரைக்கு பட்ஜெட் அறிவிப்புகள்

image

▶️மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அருங்காட்சியகம்

▶️மதுரையில் மாணவிகளுக்கு தங்கும் விடுதிகள்

▶️மதுரையில் முதியவர்களுக்கு அன்புச் சோலை மையங்கள்

▶️மதுரையில் நதிக்கரை மேம்பாட்டு பணிகள்

▶️மேலூரில் காலணி தொழில் பூங்கா

▶️மதுரையில் புதிய தொழிற்பேட்டைகள்

உங்க ஊர் அப்டேட்ட உங்க நண்பருக்கு SHARE பன்னுங்க

News March 14, 2025

மாணவிக்கு பாலியல் தொல்லை அரிசி கடைக்காரர் மீது புகார்

image

சோழவந்தாள் பகுதியை சேர்ந்த செல்வப்பாண்டி,அரிசி கடை வைத்து வருகிறார். இவர் வாடிக்கையாளர் ஒருவரது வீட்டுக்கு அரிசி மூடையை கொண்டு சென்றார். அங்கு பெற்றோர் இல்லாத நேரத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி மட்டும் இருந்தார். செல்லப்பாண்டி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. மாணவி சத்தம் போட்டதால் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இது குறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை

News March 14, 2025

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

image

உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் பெண்கள் திருவிளக்கு பூஜை கோவில் நிர்வாக நடத்தப்பட்டது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றினார்கள். திருவிளக்கு பூஜை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.அம்மன் அருள் பெற SHARE பன்னுங்க.

News March 13, 2025

மதுரை : இதை செய்தால் 1 லட்சம் ரூபாய் அபராதம்

image

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகனேரி, உயர்நீதிமன்ற மதுரை கிளை, உத்தங்குடி, பாண்டி கோவில் பகுதி காலியிடங்கள், சாலை ஓரங்கள், நீர்நிலைகள், திறந்த வெளி கால்வாய்கள் ஆகிய இடங்களில் குப்பைகள் கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குப்பை கொட்டும் நபர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள் குப்பைகளை அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

News March 13, 2025

மதுரை : இதை செய்தால் 1 லட்சம் ரூபாய் அபராதம்

image

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகனேரி, உயர்நீதிமன்ற மதுரை கிளை, உத்தங்குடி, பாண்டி கோவில் பகுதி காலியிடங்கள், சாலை ஓரங்கள், நீர்நிலைகள், திறந்த வெளி கால்வாய்கள் ஆகிய இடங்களில் குப்பைகள் கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குப்பை கொட்டும் நபர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள் குப்பைகளை அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

error: Content is protected !!