India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பரங்குன்றம் கோவிலில் நேற்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 11-ந் தேதி கைப்பாரம், 16-ந் தேதி சூரசம்ஹாரம், 17-ந்தேதி பட்டாபிஷேகம், 18-ந் தேதி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 19-ந்தேதி தேரோட்டமும், 20-ந்தேதி தீர்த்த உற்சவமும் நடக்கிறது என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு. மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பிய மதுரை வைகை அதிவேக விரைவு ரயில் மார்ச் 6,7 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதேபோல எழும்பூர் – புதுச்சேரி இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 9ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும். எழும்பூர் – ராமேஸ்வரம் இடையேயான சேது அதிவேக விரைவு ரயில் மார்ச் 9ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது .
மதுரையில் உள்ள தெருவோர உணவு வியாபாரிகளுக்கு FSSAI பதிவு கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இடம் பெயரும் (அ) பயணம் செய்து (நகரக்கூடிய வண்டிகள் மூலம்) பேக்கேஜ் செய்யப்பட்ட அல்லது புதிதாக தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் தெரு வியாபாரிகள், புதிய விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தலுக்கு பதிவு கட்டணம் கிடையாது என உணவு பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பி எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வருகின்ற மார்ச்.15 மற்றும் 16ஆம் தேதி நேர்காணலில் பங்கேற்கலாம் என அழைப்பு. *ஷேர் பண்ணுங்க
மதுரை தல்லாகுளம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில்(08.03.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு “The Garfield Movie” என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள குழந்தைகள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. *ஷேர் செய்யுங்கள்
மதுரையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை அண்ணா நகர் பகுதியில் இயங்கி வந்த அம்பிகா திரையரங்கம் விரைவில் இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. அதற்கு முன் கடைசி படமாக நடிகர் ரஜினி நடித்த தளபதி திரைப்படம் இன்று(மார்ச்.5) மாலை 7 மணி சிறப்பு காட்சியாக திரையிடபட உள்ளது. மதுரையின் முக்கிய அடையாளமாக இருந்த இந்த திரையரங்கத்தில் கடைசி படம் பார்க்க மதுரை மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களை தெரிவிக்க உதவி எண்கள் (9498383075, 9498383076) அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த செய்தி மூலம் பிறரும் பயன்பெற *ஷேர் செய்யுங்கள்
மதுரை – சிங்கப்பூர் விமான சேவையை ரத்து செய்யும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்பதையும், மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லி, கோலாலம்பூர் போன்ற முக்கிய நாடுகளுக்கு விமான சேவைகள் வழங்கும் வாய்ப்புகள் பற்றியும் எம்.பி.மாணிக்கம் தாகூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் சிங்கிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பல்வேறு விமான சேவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள் திறப்பு இன்று நடைபெற்றது. உண்டியல் திறப்பின் போது ரொக்கம் ரூ.1 கோடியே 24 லட்சத்து,16 ஆயிரத்து 336, 592 கிராம் தங்கம், 1002 கிராம் வெள்ளி மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 580 எண்ணம் வரப்பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்ச்.7 அன்று காலை1 0 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.