India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 8ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை கடைக்க சென்ற சிறுமி சற்று நேரத்தில் வந்து சிலர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறினார். விசாரணையில், டூவீலர் மெக்கானிக் முத்துகுமார் 18, சிறுமியுடன் பள்ளியில் படிக்கும் பிளஸ் 12 மாணவர்கள் இருவர்,10ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் மற்றும் 17 வயது சிறுவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
மதுரை புது விளாங்குடி கணபதி முதல் தெருவை சேர்ந்தவர் இளமாறன் .மதுரையில் உள்ள காமராஜர் யூனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் செமஸ்டர் தேர்வுக்கு பணம் கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் தேர்வு எழுத முடியாத விரக்தியில் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையிலேயே இவரது தயார் பீஸ் கட்டியது தெரியாமல் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
திருப்பரங்குன்றம் பூங்கா பஸ்நிறுத்த தீயணைப்பு நிலைய வளாகத்திலுள்ள ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாம் மார்ச்.20ல் துவங்குகிறது. காலை 9:30 முதல் மாலை 5:30 மணிவரை ஒருமாதம் நடக்கும் முகாமில் விருப்பமுள்ள, 18 முதல் 45 வயது வரையான பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். மார்ச்.19க்குள் 9445600561ல் அல்லது mdu.rudset@gmail.comல் விண்ணப்பிக்கலாம்.
அரசு மானியம் பெற விவசாயிகளுக்கு தனி அடையாள எண் பதிவு செய்யப்படுவதால் தோட்டப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் உடனே பதிவு செய்ய வேண்டும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபா தெரிவித்துள்ளார். தங்கள் கிராமத்தில் நியமிக்கப்பட்ட தோட்டக்கலை, வேளாண் அலுவலர்கள், சமுதாய வளப் பணியாளர்களிடம் ஆதார், கம்ப்யூட்டர், ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என்றார். *ஷேர்
மதுரை : செல்வ மகள் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கான சிறப்பு முகாம் தென் மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் வருகிற மார்ச்.13, 20 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தென் மண்டலத்தில் இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு தொடங்கி இருப்பவர்களின் எண்ணிக்கை ரூ.7.86 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், சேமிப்பு வைப்பு தொகை ரூ. 5,219 கோடியை கடந்துள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பாக பொதுத்துறை அயல்நாடு வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அரேபியாவில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.03.2025. மதுரை மட்டுமில்லாமல் தமிழக முழுவதும் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விவரம் அறிய<
மதுரை: இந்திய மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு சார்பில் 2023-24 ம் ஆண்டுக்கான தேசிய பொது பேருந்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 19 விருதுகள் கிடைத்தன. இதில், மதுரை போக்குவரத்து கோட்டம் பேருந்துகளின் டயர் செயல்திறன், எரிபொருள் செயல்திறன், வாகனப் பயன்பாடு ஆகியவற்றில் சிறந்த செயல்பாடுகளுக்காக 4 விருதுகளை வென்றது. இந்த விருது உங்கள் கருத்து *ஷேர் பண்ணுங்க
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சார்பாக பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில்,அச்சம் எதற்கு உங்கள் அழைப்பின் அவசியமும், அவசரமும் நாங்கள் அறிவோம், பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை உணர்ந்தால் உடனே அழையுங்கள் காவல் உதவி எண் 100 மற்றும் பெண்கள் உதவி எண் 181 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்
மதுரை, வைகை வடகரையில் யானைக்கல் மேம்பாலத்தின் இறக்கம், மேளக்காரத்தெரு பகுதியில் பாலத்தின் மேல்தளத்தில் கட்டுமானம், சாலைப்பணிகள் நடக்க உள்ளது. இதையொட்டி இன்று(மார்ச்.12) இரவு 10:00 மணி முதல் நாளை(மார்ச்.13) காலை 6:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யானைக்கல் பாலம் வழி எம்.எம்.லாட்ஜ் சந்திப்புக்கு செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. *ஷேர்
குடும்பத்தில் ஓயாத பிரச்சனை, வாழ்க்கை துணையுடன் பிரச்சனை, திருமணம் தள்ளிப் போவது, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் பிரச்சனைகள் இருந்தால் மதுரையில் உள்ள மிகவும் பிரபலமான இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலுக்கு சென்று வழிபட்டால் இந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது .
Sorry, no posts matched your criteria.