Madurai

News September 15, 2024

மதுரை: விஜய் பல இன்னல்களை சந்திப்பார் – சீமான்

image

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்: ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவன் தைரியத்தை பாராட்டுவதாகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டும், நிலைப்பாட்டில் பின் வாங்காமல் இருக்க வேண்டும். நான் கட்சி துவங்கியபோது பல இன்னல்களை சந்தித்தேன். புதிதாக கட்சி துவங்கிய விஜய் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

News September 15, 2024

மீனாட்சி அம்மன் கோவிலில் “விறகு விற்ற லீலை”

image

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவுக்கு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருவிளையாடலில் நடந்த முக்கிய லீலைகளை எடுத்துரைக்கும் வகையில் நடைபெறும் இவ்விழாவில் இன்று(செப்.14) சுந்தரேஸ்வரர் “விறகு விற்ற லீலை” நடைபெற்றது. தனது பக்தரான பாணபத்திரருக்காக விறகு சுமந்து லீலையை எடுத்துரைக்கும் வகையில் சுந்தரேஸ்வரர் விறகை தலையில் சுமந்து நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

News September 14, 2024

மதுரையில் குரூப் 2 தேர்வில் 10 ஆயிரம் பேர் “ஆப்சென்ட்”

image

மதுரை மாவட்டத்தில் இன்று 146 மையங்களில் குரூப் 2 போட்டி தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 42, 895 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 32, 106 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 10,789 பேர் தேர்வை புறக்கணித்து ஆப்சென்ட் ஆகியுள்ளனர். சதவீத அடிப்படையில் 25% பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2024

மதுரை மல்லிக்கு இவ்வளவு விலையா

image

மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1500 க்கு விற்பனையாகி வருகிறது. இரு தினங்களுக்கு முன்னர் 400 முதல் 500 ரூபாய்க்கு மல்லிகை பூவின் விலை நாளை ஆவணி மாத முக்கிய முகூர்த்தம் என்பதால் இரு மடங்கு உயர்ந்து 1500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதிகபட்சமாக கனகாம்பரம் ரூ.3000க்கும், பிச்சி பூ ரூ.800க்கும் செவ்வந்தி ரூ.100, ரோஸ், சம்மங்கி ரூ.200 க்கும் விற்பனையாகின்றன.

News September 14, 2024

புதிய சிறை அமைவிடத்தில் டி.ஜி.பி ஆய்வு

image

மேலுார் அருகே செம்பூரில் 69 ஏக்கர் பரப்பளவில் மதுரை மத்திய சிறை அமைய உள்ளது. இதற்கான இடத்தை நேற்று காவலர் வீட்டு வசதி கழக டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவ் நேற்று ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் 3 மாதத்திற்குள் துவங்க உள்ளதால் புதிய சிறைக்கான சாலை வசதி மற்றும் சிறை கட்டமைப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

News September 14, 2024

அதிகாரி மிரட்டியதால் அஞ்சலக பெண் ஊழியர் தற்கொலை

image

மதுரை டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் இவரது மனைவி சுமதி. திருப்பரங்குன்றத்தில் அஞ்சலகத்தில் ஊழியராகப் பணியாற்றினார். நேற்று முன்தினம் சுமதி பணியிலிருந்த போது, அவரது உயரதிகாரி ஒருவர் வேலை சம்பந்தமாக அவரை குறை கூறி, மிரட்டி விளக்க கடிதம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுடன் வீட்டிற்கு வந்த சுமதி, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 14, 2024

மதுரை: அரசு ஆரம்பப்பள்ளிக்கு உதவிய தம்பதி

image

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளிக்கு அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன்- மகிழ்மதி என்ற தம்பதியினர் ரூ.9500 மதிப்பிலான தானியங்கி மின்சார மணியை அன்பளிப்பாக வழங்கி உதவினர். இந்த தம்பதியின் செயலை அப்பகுதி பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வெகுவாக பாராட்டினர்.

News September 13, 2024

மதுரை விடுதி தீ விபத்து விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது

image

மதுரை கட்ராபாளையம் பகுதியில் விசாகா பெண்கள் விடுதி தீ விபத்தில் 2 ஆசிரியர்கள் உயிரிழந்த நிலையில் பெண்கள் தங்கு விடுதியின் கீழ் செயல்பட்டுவந்த விசாகா மருத்துவமனையில் போலீசார் நடத்திய விசாரணையில் அலோபதி மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்ததாக விசாகா மருத்துவமனை மருத்துவர் தினகரன் கைது செய்யப்பட்டார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் அளித்த புகாரில் திடீர் நகர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

News September 13, 2024

மீனாட்சியம்மன் கோவிலில் இன்று தரிசனம் கிடையாது

image

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில இன்று 13.09.2024 ஆவணி மூலத்திருவிழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமக்கும் லீலைக்காக கோயிலிலிருந்து அம்மன் சுவாமி அதிகாலை 05.00 மணியளவில் புறப்பாகி மதுரை ஆரப்பாளையம், புட்டுத்தோப்பிற்கு சென்றது. இதனால் இன்று அதிகாலை 05.00 மணியிலிருந்து இரவு 10.30 மணி வரை திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும், தரிசனம் கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 13, 2024

தூய்மை பணியாளரை இழிவாக பேசிய வழக்கில் – அதிரடி உத்தரவு

image

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை சாதி பெயரை சொல்லி இழிவாகப் பேசிய சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை திடீர் நகர் போலீஸ் உதவி கமிஷனர், புகார்தாரர்களையும், சுகாதார ஆய்வாளர் ரமேஷிடமும் 2 வாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மை பணியாளர் பொண்ணுதாய் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!