Madurai

News September 23, 2024

செல்லூர் ராஜூ பெயரை கூறி ரூ.6.80 கோடி மோசடி

image

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் நெருங்கிய நபர் என கூறி மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் சரவணனிடம் ரூ.6.80 கோடி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. முகநூல் மூலமாக பழக்கமான தொழிலதிபர் சரவணன் மணல் குவாரி அமைக்க அதிமுக கவுன்சிலர் மாயத்தேவனிடம் உதவி கோரியபோது சொல்லூர் ராஜுவின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த கவுன்சிலர் மாயத்தேவன்,சங்கரி,செல்வம் உள்ளிட்ட 5பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

News September 23, 2024

20 ஆண்டுகளுக்கு பின் தண்ணீர் திறப்பு

image

விக்கிரமங்கலம் பெரியார் வைகை கால்வாயிலிருந்து, திருமங்கலத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் 2004 ஆம் ஆண்டுக்குப்பின் 20 ஆண்டுகளாக நீர்வரத்து கால்வாய் பராமரிக்காமல் தண்ணீர் திறக்கப்படவில்லை. சமீபத்தில் நீர்வரத்து கால்வாய் பராமரிக்கப்பட்டதையடுத்து 20 ஆண்டுகளுக்கு பின் இன்று மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

News September 23, 2024

2 நுழைவாயில்களை இடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

image

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள நுழைவாயில் மற்றும் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவாயில் இரண்டையும் இடிக்க இன்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. நுழைவாயிலின் தூண்களுக்கு பின்புறம் பலர் வணிக நோக்கில் பயன்படுத்துவதால், அதை ஆய்வு செய்யாமலே இடிக்கலாம். அரசு விருப்பினால் சாலையின் இரு புறத்தையும் இணைத்து பெரிய நுழைவாயில்களை அமைக்கலாம் என நீதிபதிகள் இன்று கருத்து தெரிவித்தனர்.

News September 23, 2024

12ம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை

image

பரவையை சேர்ந்த முத்துபாண்டி மகன் பிரவீன்(வயது 16). பிளஸ்-2 பயிலும் மாணவன் பிரவீன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென எலி பேஸ்ட், குடித்து வீட்டு கழிவறையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 23, 2024

திருமா குற்றச்சாட்டுக்கு மதுரை ஆட்சியர் பதில்

image

மாவட்ட ஆட்சியர் சங்கீதா பொறுப்பேற்றது முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் அவர் தனது வரம்பை மீறி செயல்பட்டு வருவதாகவும் கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். குற்றச்சாட்டு குறித்து நேற்று (செப்.22) ஆட்சியர் சங்கீதாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “நோ கமெண்ட்ஸ்” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

News September 22, 2024

துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்

image

மதுரை, ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி (31) கடந்த ஆண்டு கோவையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் நாகர்கோவில் ஆல்வின் (39)கைதனார். ஜாமீனில் வெளிவந்த இவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை பிடிக்க முயன்றபோது போலீசாரை கத்தியால் கையில் குத்தியதால் போலீசார் துப்பாக்கியால் முட்டியில் சுட்டதில் ஆல்வினை காயமடைந்தார்.

News September 22, 2024

அலங்காநல்லூர்: அத்துமீறலில் முடிந்த INSTA நட்பு!

image

அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சரவணன்(22). இவர் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை இன்ஸ்டாகிராமில் பழகி ஆசை வார்த்தை கூறி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின்பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துமணி சரவணனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

News September 22, 2024

மதுரையில் மேலும் ஒரு நான்கு வழிச்சாலை

image

மதுரை மாநகரில், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக மதுரை-சிவகங்கை சாலை உள்ளது. இச்சாலையில் அரசு மருத்துவமனை, அண்ணா பஸ் நிலையம், ஆட்சியர் அலுவலகம் போன்றவை உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆட்சியர் அலுவலகம் ஜங்ஷன் – கோமதிபுரம் 5வது தெரு சாலை வரை 2 கி.மீ. தூரத்திற்கு 4 வழி சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்த 60 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

News September 21, 2024

சோழவந்தானில் ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரசார்

image

சோழவந்தானில் இன்று ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை வழக்கில் இணைக்க வேண்டும் எனக்கூறிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை கண்டித்து சோழவந்தான் பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் மூர்த்தி, சோனைமுத்து,முருகன், மணிவண்ணன், அபுதாஹிர். திருமுண்ணாமலை மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

News September 21, 2024

அண்ணாவின் ஆன்மா மன்னிக்காது: ஆர்.பி.உதயகுமார்

image

வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பாக அறிஞர் அண்ணா 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையில் திமுகவில் எத்தனையோ மூத்த தலைவர்கள் இருக்க, அவர்களை விட்டுவிட்டு உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினால் அண்ணாவின் ஆன்மா மன்னிக்காது என்று கூறினார்.

error: Content is protected !!