India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மக்களே டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9-ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் விருதுநகர், மதுரை, அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் டிகிரி, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் தொடர்பு கொள்ளலாம். SHARE செய்து உதவவும்
கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருக்கல்யாண திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 11-ம் தேதி அன்று காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் திருக்கல்யாண திருவிழா பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடைபெறும். இதில் பெரியாழ்வார் முன்னிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் ஒரே நேரத்தில் கள்ளழகர் பெருமாள் மணக்கிறார்.பக்தர்களுக்கு SHARE பண்ணவும்.
மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஆந்திர பக்தர் ஒருவர் திடீரென தடுப்பு மீது ஏறி வரிசைக்குள் புகுந்தார். இதை கவனித்த கோயில் காவலரும், ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான சுந்தரபாண்டி கண்டித்தார். அவருக்கும், பக்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆந்திரா பக்தர்கள் சுந்தரபாண்டியை தாக்கியதில் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி,மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டியளித்துள்ளார். அதில், கச்சத்தீவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் சட்டப் போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு மீனவர்களின் உயிர், உடைமை பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது என்றார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-வது மாநாடு நடைபெற்று வருகிறது. முதல் நாள் கலை நிகழ்வில் ஆசிரியர் சாலமன் பாப்பையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். சிறப்பு விருந்தினராக இயக்குனரும் நடிகருமான சசிகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக காலையில் கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
முன்பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக மதுரை – திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இந்த புதிய வசதி திருவனந்தபுரம் – மதுரை ரயிலில் (16343) ஜூன் 05 முதலும் மதுரை – திருவனந்தபுரம் ரயிலில் (16344) ஜூன் 06 முதலும் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி குறைக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு விமான மூலம் வருகை புரிந்து அன்றைய தினமே மதுரையிலிருந்து செல்ல இருப்பதால், மதுரை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் 06.04.2025 அன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் மாதம் ரூ.21250 -27,500 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. PG ஆசிரியர் Economics , Commerce, Biology
TG ஆசிரியர் (Hindi0 உட்பட 06 பதவிகளுக்கு B.Ed, MA, MBA படித்த 18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் <
மதுரையில் மாநில, மாவட்ட அளவிலான சிறந்த சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம், நகர்ப்புற, பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றை தேர்வு செய்து மணிமேகலை விருது வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மணிமேகலை விருதுக்கு தகுதியான சுயஉதவி குழுக்கள், சமுதாய அமைப்புகள் ஏப்ரல் 25க்குள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.