India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் துறை இயக்குநர் வழிகாட்டுதலின் படி “போலீஸ் அக்கா” என்ற முன் மாதிரி திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.12) மதுரை மாநகர காவல் ஆணையர் மலோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாநகரில் உள்ள 155 பள்ளிகள் 25 கல்லூரிகளில் வாரம் ஒரு முறை மாணவ மாணவியரிடம் கலந்துரையாடி உளவியல் ஆலோசனை வழங்க பெண் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் இன்று (நவ.13) காலை 11 மணிக்கு மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை, மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில் விவசாயிகள் தங்கள் குறைகள் சார்ந்த மனுக்களை குறைதீர் கூட்டத்தில் வழங்கி பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் பகுதியில் இன்று (நவ.12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை சத்திரப்பட்டி அடுத்துள்ள மஞ்சம்பட்டி கிராமத்தில் விஜயா கார்டன் ஹோம் உள்ளது. இங்கே சட்டத்திற்கு புறம்பாக 11 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கோவையைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி உட்பட ரெசார்ட் மேனேஜர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் ஐயர் பங்களா பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இன்று (நவ.12) பல்வேறு இடங்களில் மழை பெய்தாலும் தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக மதுரையில் 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது இயல்பை விட 5.4 டிகிரி அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் குடும்பத்தார்களால் கைவிடப்பட்ட முதியோர்களை அவர்களுக்கான ஆரோக்கியமான சுற்றுப்புற சூழ்நிலையில் தங்குவதற்கான இடவசதி உணவு மற்றும் உடை வழங்கி அவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பதை உணர்த்த மதுரை மாநகர காவல்துறை அரசு சாரா நிறுவனத்துடன் இணைந்து “காவல் கரங்கள்”என்ற அமைப்பு மூலம் மறுவாழ்வு அளித்து பலரின் பாராட்டை பெற்று வருகிறது. உதவி பெற 82487-41359, 0452-2330100 அழைக்கலாம் *பகிரவும்*
மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் 2024 ஆம் ஆண்டு நவ.16 ,17 , 23 & 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். 10 சட்டமன்றத்தொகுதிகளில் 2,752 வாக்குச்சாவடிகளில் அதாவது 1,165 வாக்குச்சாவடி மையங்களில் முகாம் நடைபெற உள்ளதால் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் பயனடைந்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 12 ஸ்டேஷன்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் (ஏ.டி.வி.எம்.,) மூலம் பயணிகளுக்கு முன்பதிவில்லா டிக்கெட் வழங்கும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நவ.29க்குள் மூத்த கோட்ட வணிக மேலாளர், கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம், மதுரை – 625016 எனும் முகவரியில் உள்ள பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மதுரை சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் ராஜ்குமார், இன்று(நவ.12) மதுரை விமான நிலையம் அருகே சென்ற போது, பைக்கில் வந்த ஆறுமுகம் என்பவர், தன் வண்டிக்கு வழிவிட கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, காவலர் ராஜ்குமாரை கத்தியால் குத்தியுள்ளார் ஆறுமுகம். ஆறுமுகத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுப்பதற்கும், தாய்மார்கள் பாலூட்டுவதற்கும் ஓய்வறை பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அனைத்து நடைமேடைகளிலும் பயணிகள் ஓய்வறை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
Sorry, no posts matched your criteria.