India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி செல்லும் விமானத்தில் அமைச்சர் எவ. வேலு உட்பட 27 பயணிகள் பயணம் செய்தனர். தூத்துக்குடியில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழை காரணமாக 7.30 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் தரையிறங்க முடியாததால் 20 நிமிடங்கள் வானில் வட்டமடித்தது. பின்னர் 8 மணி அளவில் விமானம் மதுரையில் தரையிறக்கப்பட்டது. அமைச்சர் உட்பட 27 பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி விலங்குகளைப் பாதுகாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், அனைத்து விலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு.
மதுரை, பனங்காடியைச் சேர்ந்தவர் +2 மாணவர். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கிறார். சில நாட்களாக அவரை சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததோடு அநாகரிக செயல்களிலும் ஈடுபட்டனர். அம்மாணவர்கள் குறித்து தலைமையாசிரியரிடம் மாணவனின் தந்தையும், சித்தப்பாவும் புகார் அளித்தனர். அப்போது அவரது சித்தப்பா மாணவனை தாக்க, ஆத்திரமுற்ற சக மாணவர்கள் அவரை கடுமையாக தாக்கினர். தலைமையாசிரியர் இருதரப்பையும் கண்டித்தார்.
தமிழகத்தில் 37,579 அரசு பள்ளிகளில் 8 ஆயிரம் பள்ளி கட்டடங்கள் மிகவும் மோசமாக உள்ளதாக அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் மதுரை டாக்டர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இதை சரி செய்வோம்’ என உறுதி அளித்தனர். இதுவரை எத்தனை பள்ளிகளை சரி செய்தார்கள் என புள்ளி விபரம் வெளியிடப்படவில்லை. 37,579 பள்ளிகளுக்கு ரூ.3,758 கோடியை ஒதுக்கினால் சீர் செய்யலாம் என்றார்.
மதுரை மாவட்டத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள் உடனே விண்ணப்பிக்கலாம். இதற்கு சேமிப்புப் பத்திரத்துடன் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்குப் புத்தக நகல், 2 புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் இமானுவேல் சேகரனாரின் மணிமண்டப பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இன்று (நவ.20) மதுரை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விபரம் மதுரை மாவட்ட காவல் நிலைய அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சமயநல்லூர், ஊமச்சிகுளம், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர் போன்ற மதுரை மாவட்ட பகுதிகளுக்கு இரவு நேர ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விபரங்கள் மதுரை மாவட்ட காவல் நிலைய அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகள் ஒரு பக்கம். விமான நிலைய வளர்ச்சி மற்றொரு பக்கம். மக்கள் நலனையும், விமான நிலைய விரிவாக்கத்தையும் சமநிலைப்படுத்தி இதற்கான தீர்வு விரைவாக எட்டப்படும் என நம்புகிறோம். மேலும் தாமதம் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமயநல்லூர் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மதுரை, திண்டுக்கல், சமயநல்லுார் சாலையில் கடந்த 2018 முதல் 2024 தற்போது வரை மொத்தம் 542 விபத்துக்கள் நடைபெற்றதாகவும் அதில் 137 பேர் இறந்துள்ளதாகவும் 405 பேர் காயமடைந்ததாக காவல் துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (நவ.20) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பார்சல் சர்வீஸ் லாரி ஒன்று வேகமாக சென்றது. போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வாடிப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் மகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.