Krishnagiri

News August 22, 2024

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் – SIT

image

கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கில் ஆலோசனை மேற்கொண்ட சமூகநலத்துறை செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; முதல்வரின் உத்தரவு படி அமைக்கப்பட்ட குழுவின் மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் ,மேலும், உளவியல் ரீதியாக மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். மேலும், இது போன்று இனி நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பரிந்துரை வழங்கப்படும் என்று கூறினார்.

News August 22, 2024

வன்கொடுமை குறித்து ஐஜி, சமூகநலத்துறை செயலாளர் ஆலோசனை

image

கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஐஜி மற்றும் சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்ட நிலையில் தற்போதுஆலோசனை நடைபெற்று வருகிறது. இது வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் சரயு மற்றும் மாவட்ட எஸ்.பி தங்கதுரையுடன் இந்த குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

News August 22, 2024

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு புகார் அளிக்கலாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், இளம்வயது திருமணம், குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட குழந்தைகள் சார்ந்த பிரச்னைகள் குறித்து 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என கிருஷ்ணகிரி ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் இலவச உதவி மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

News August 22, 2024

கிருஷ்ணகிரியில் 650 பேருக்கு வேலைவாய்ப்பு

image

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். அதில், கிருஷ்ணகிரி WEG இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தில் மூலம் 650 கோடி முதலீடு செய்யப்பட்டு 650 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதவிர, சுந்தரம் பாஸ்டென்னர்ஸ்( SUNDARAM FASTENERS) நிறுவனத்தின் மூலம் கிருஷ்ணகிரி உட்பட 6 மாவட்டங்களில் 1,577 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

News August 21, 2024

கிருஷ்ணகிரி தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் இடமாற்றம்

image

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகள் பாலியல் விவகாரத்தால் தமிழ்நாட்டில் மாவட்ட கல்வி அலுவலர்கள் 57 பேரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் ராமாவதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் தற்போது இடைநிலை கல்வி அலுவலர் சி.கே.கோபாலப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News August 21, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் இருளர் காலணியில் ஆய்வு

image

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ கள ஆய்வில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று 21.08.2024 பர்கூர் ஊராட்சி ஒன்றியம், காமாட்சிபுரம் இருளர் காலணியில், பழுதடைந்த வீடுகளை சீரமைப்பது குறித்து நேரில் பார்வையிட்டு, இருளர் இன மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதில் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

News August 21, 2024

பாலியல் வழக்கில் கைதான சிவரான் மீது மேலும் ஒரு புகார்

image

பாலியல் வழக்கில் கைதான சிவராமன் தன்னை வழக்கறிஞர் என கூறி நில பிரச்சனையை தீர்த்து வைப்பதாக 7 பேரிடம் ரூ. 36 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும், போலியாக நீதிமன்ற உத்தரவை தயார் செய்தும், போலி ரசீது தயார் செய்தும் ரூ. 36.20 லட்சம் மோசடியாக வசூலித்தது தெரியவர பாதிக்கப்பட்ட மக்கள் ஆதாரங்களுடன் கிருஷ்ணகிரி துணை கண்காணிப்பாளரிடம் புகார் தாக்கல் செய்துள்ளனர்.

News August 21, 2024

சிறப்பு புலனாய்வு குழு அமைக்க முதலமைச்சர் உத்தரவு

image

கிருஷ்ணகிரியில் நடந்த பாலியல் துன்புறத்தல் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு அமைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனுடன், அடுத்த 15 நாட்களுக்குள் இது தொடர்பான அனைத்து விசாரணையையும் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 21, 2024

இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி தொடக்கம்

image

கேஆர்பி அணைப் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மகளிருக்கு இலவசமாக 30 நாட்கள் தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 முதல் 45 வயது வரை உள்ள 8ம் வகுப்பு படித்த பெண்கள் வருகிற 27ஆம் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். 9442247921, 9080676557 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

News August 21, 2024

பாலியல் வன்கொடுமை வழக்கில் அறிக்கை கேட்ட மகளிர் ஆணையம்

image

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து அறிக்கை கேட்டுள்ளது. 13 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை 11 பேர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர். மேலும், சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!