Krishnagiri

News August 28, 2024

கிருஷ்ணகிரியில் நாளை திமுக கலந்தாய்வு கூட்டம்

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் நாளை(ஆக 29) காலை 11 மணிக்கு தேவராஜ் மஹாலில் திமுக பொது நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்திற்கு உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சரும் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளருமான சக்கரபாணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இதில் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளர் மதியழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News August 28, 2024

மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆக 31ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2, டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

ஓசூர் பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆலோசனை

image

ஓசூா் முதல் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிக்கையை இறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, ஒசூா் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த், ஒசூா் உதவி ஆட்சியர் பிரியங்கா ஆகியோருடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்.

News August 28, 2024

கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், இராயக்கோட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கோவிந்தராஜ்(45), தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக ஒசூர் நகர போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், சடலத்தை கைப்பற்றி போலிசார் உயிரிழந்த கோவிந்தராஜ் மனைவி நந்தினி(35), என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், குடிபோதையில் தகராறு செய்த கணவரை கழுத்து நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது

News August 27, 2024

ஓசூர் – பெங்களூர் இடையே மெட்ரோ ரயில் சேவை

image

ஓசூர் – பெங்களூர் இடையே 23 கி.மீ நீளத்திற்கு மெட்ரோ ரயிலை இயக்குவது குறித்து நேரடியாக அய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 23 கி.மீ தொலைவிலான பாதையில் 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்குப் பின் மெட்ரோ ரயில் நிறுவன குழு, கிருஷ்ணகிரி ஆட்சியர், ஓசூர் மாநகராட்சி ஆனையர் ஆலோசனை மேற்கொண்டனர். விரைவில் இதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

News August 27, 2024

கிருஷ்ணகிரியில் இன்று முதல் பள்ளி திறக்கப்பட்டது.

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்திய சிவராமன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்தியது. இதனால், சம்பவம் நடைபெற்ற குறிப்பிட்ட பள்ளி கடந்த 18-ஆம் தேதி மூடப்பட்டது. இந்நிலையில் 9 நாட்களுக்கு பிறகு, இன்று திறக்கப்பட்ட வகுப்புகள் தொடங்கியுள்ளது.

News August 27, 2024

கிருஷ்ணகிரி விளையாட்டு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழக முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் நடைபெறவுள்ளன. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய ஆக.25 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்.2 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News August 27, 2024

கிருஷ்ணகிரியில் 13,808 மாணாக்கர்கள் பயன்

image

கிருஷ்ணகிரியில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் 13,808 மாணவ, மாணவிகள் பயன் அடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுமை பெண் திட்டத்தின் கீழ் 7,538 மாணவிகள் பயனடைந்துள்ளாதாகவும், உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 34% உயர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளனர். மேலும், 6,270 மாணவர்கள் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

News August 27, 2024

கிருஷ்ணகிரி அருகே கர்னாடக மது விற்ற இருவர் கைது

image

சூளகிரி அருகே மளிகை கடைகளில் கர்நாடக மதுபானம் விற்பனை செய்வதாக பேரிகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் பேரிகை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ்.தட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜப்பா (60) என்பவரும், தேர்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ்(32) என்பவரும், கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

News August 26, 2024

கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடியில் ரூ.269 கோடி வசூல்

image

தமிழ்நாட்டில் உள்ள 67 செயல்பாட்டு சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் 2023- 2024 நிதி ஆண்டில் ரூ.4,221 கோடி வசூலித்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடியில் ரூ.269 கோடி வசூலித்து உள்ளது. இரண்டாவது இடத்தில் கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியில் ரூ.257 கோடி வசூலித்து உள்ளது

error: Content is protected !!