India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக பணியாளர்கள் 26 நபர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள், மற்றும் 11 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது. இதில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2, டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் இயங்கும் சட்ட உதவி ஆலோசணை அமைப்பிற்கு” துணை மற்றும் உதவி சட்ட உதவி வழக்கறிஞர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். விருப்பமுள்ளவர்கள் https://krishnagiri.dcourts.gov.in/ நீதிமன்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த உரிய ஆவணங்களுடன் 11.09.2024-ம் தேதி மாலை 05.30 மணிக்குள் பதிவு தபால் மூலமாகவோ (அ) நேரிலோ அனுப்பலாம் .
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்டைய பழங்குடி இருளர் இன மக்களுக்கு சிறப்பு PMJANMAN திட்டத்தின் மூலம் முகாம் நாளை முதல் செப் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒப்பதவாடி, காரகுப்பம், ஆலப்பட்டி, மத்தூர், உத்தனப்பள்ளி, சிங்காரபேட்டை, தளி, அனுமந்தபுரம், வேப்பனப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற உள்ள இம்முகாமை பழங்குடியின மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கு நேற்று உயர்நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. விசாரணை அறிக்கையை செப் 4-க்குள் தாக்கல் செய்யவும், மேலும் சிவராமன் மற்றும் அவரது தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கைகயை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனுடன் கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு பள்ளியை ஆய்வு செய்து மாணவிகள், பெற்றோர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சிலைகளை வைப்பது மற்றும் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கணக்கில் வராத சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ண ராஜன் தலைமையிலான ஆய்வில் பணம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிசிடிவி பொருத்தினால் மட்டுமே விநாயகர் சிலை வைக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் சரயூ அறிவித்துள்ளார். மேலும் நடப்பாண்டில் 5 நாட்கள் மட்டுமே விநாயகர் சிலை வைக்க அனுமதி என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதித்த நீர் நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பருகூர் தனியார் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக செப்டம்பர் 4 ஆம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உயிரிழந்த முக்கிய குற்றவாளி சிவராமன், அவரது தந்தையின் உடற்கூரராய்வு அறிக்கையையும் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த விசாரணையில் சம்பந்தப்பட்ட வழக்கில் பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மற்றும் கல்வித்துறை அனுமதியின்றி முகாம் நடத்தியது எப்படி என்று அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு மதியம் 2.15 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
Sorry, no posts matched your criteria.