India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு கன அடி தண்ணீர் 6.792 திறக்கப்பட்டுள்ளதால் ஒன்பது நாளாக மூன்று மாவட்டம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அனைத்து பணி இடங்களில் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 (தடுப்பு, தீர்வு, தடை) -ன் படி உள்ளக குழு (Internal Committee) அமைத்திட தெரிவிக்கப்படுகிறது. இந்த குழுவில் 50% பெண்கள் இடம் பெற வேண்டும். குழு அமைக்காத அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மீது ரூ.50,000 விதிக்கப்படும் என எச்சரித்தார்.
ஓசூர் அருகே அணையிலிருந்து வெளியேறிய ரசாயன நுரை, தட்டகானப்பள்ளி அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்ததால், அதனை அகற்ற முடியாமல் திரும்பிய தீயணைப்புத் துறையினர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று ரசாயன நுரை குறைந்ததை அடுத்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள்,துணி, நகைக்கடைகள்,தொண்டு நிறுவனங்கள், கூட்டுறவுத்துறை சங்கம் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் புகார் அளிக்கும் வகையில் 4பேர் கொண்ட புகார் குழு 50 சதவீத பெண்கள் இடம்பெறும் வகையில் அமைக்க வேண்டும். தவறினால் ரூ50,000 அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை.
21-வது கால்நடை கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்குகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்177கால்நடை கணக்கெடுப்பாளர்களுக்கும்,35 மேற்பார் வையாளர்கள்16 வகை கால்நடைகள் இந்த கால்நடை கணக்கெடுப்பு பணி,வருவாய் கிராம வாரியாகவும் நகரப்பகுதிகளில் வார்டு வாரியாகவும் நடைபெற உள்ளது. கிராம மற்றும் நகர்ப்பகுதி களில் வளர்க்கப்பட்டு வரும்16 வகையான கால்நடைகளின் எண்ணிக்கை சேகரிக்கப்படும் என்று ஆட்சியர் சரயு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுவதாகக் கூறி சிலா் மோசடியில் செய்வதாக கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸில் மருத்துவக் கல்லூரி முதன்மையா் பி.சந்திரசேகரன் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட முயன்ற நபா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 எஸ்.ஐ.க்கள் உட்பட 99 காவலர்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் 18 நபர்கள் மற்றும் காவலர்கள் 99 நபர்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி தங்கதுரை அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரையின்படி பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் நியாயவிலை கடைகள் 27ம் தேதி வழக்கம்போல் செயல்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1050 நியாய விலை கடைகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு நான்காயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வரும் தண்ணீரில் அதிகப்படியான கழிவுகள் கலக்கப்பட்டுள்ளதால் சுமார் 5அடி உயரத்திற்கு ரசாயன நுரைகள் பொங்கியபடி வருகிறது. இதனால் நந்திமங்கலம் சாலையில் உள்ள தட்டனப்பள்ளி அருகேயுள்ள தரைப்பாலம் ரசாயன நுரையில் மூழ்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.