Krishnagiri

News September 15, 2024

ஓசூரில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்

image

. ஓசூரில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் 100க்கும் மேற்பட்ட விதவிதமான பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு 9 நாட்கள் பூஜைகள் நடைபெற்றன. இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் இன்று கரைக்கப்பட உள்ளது. மேலும், 1,500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

News September 15, 2024

கிருஷ்ணகிரியில் 4,286 பேர் தேர்வு எழுதவில்லை

image

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 52 தேர்வு மையங்களில் 15,248 பேர் தேர்வு எழுத அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில், 11,062 பேர் தேர்வு எழுதிய நிலையில் 4,286 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

News September 14, 2024

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி திறப்பு

image

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மைதானத்தில் 30ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத், பர்கூர் எம்எல்ஏ தே.மதியழகன் உள்ளிட்ட பலர் திறந்து வைத்தனர்.

News September 14, 2024

இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம்

image

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 27ல் சபரி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப் அவர்கள் இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். ரசூல் கமிட்டி தலைவர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர் பிரதோஸ்கான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமில் பயன்பெற்றனர்.

News September 14, 2024

கிருஷ்ணகிரியில் இன்று குருப் 2, குருப் 2ஏ தோ்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று குருப் 2, குருப் 2ஏ தோ்வு நடைபெறுகிறது. இந்த தோ்வை எழுத கிருஷ்ணகிரி வட்டத்தில் 6,784 போ், ஒசூா் வட்டத்தில் 5,280 போ், போச்சம்பள்ளி வட்டத்தில் 3,284 போ் என மொத்தம் 52 தோ்வு மையங்களில் 15,348 போ் விண்ணப்பித்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 14, 2024

கிருஷ்ணகிரியில் 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி

image

கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள அரசு ஆடவர் கலை கல்லூரியில் 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். கோபிநாத் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டி.மதியழகன், டி.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக உணவுத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

News September 13, 2024

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

image

கிருஷ்ணகிரி பாலியல் விவகாரம் மிகவும் தீவிரமானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் பக்கத்தில் நாங்களும் நிற்கிறோம். நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கிவிட்டோம். பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி வாக்குமூலம் தந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தனது வாதத்தில் தெரிவித்துள்ளது.

News September 13, 2024

ராயக்கோட்டை அருகே விபத்தில் பெண் பலி

image

சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணூரம்மாள்(28). சூளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் மாதம்மாள்(24). இவர்கள் இருவரும் ராயக்கோட்டை அருகே உள்ள டாடா எலெக்ட்ரானிக் கம்பெனியில் செக்குரிட்டியாக வேலை செய்து வந்தனர். இன்று அதிகாலை ஸ்கூட்டரில் வேலைக்கு சென்ற 2 பேரும் சாலை சென்டர் மீடியனில் மோதி விழுந்ததில் கண்ணூரம்மாள் பலியானார். தொடர்ந்து மாதம்மள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News September 13, 2024

ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்கிறது RGBSI

image

மிச்சிகன் மாகாணம் ட்ராயில் RGBSI நிறுவனத்துடன் ரூ. 100 கோடி முதலீட்டுக்கு தமிழ்நாடு அரசானது புரிந்துணர்வு ஒப்பத்தம் செய்துள்ளது. எனவே ஒசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாட்டிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, முதல்வர் அமெரிக்க சென்றுள்ள நிலையில் இந்த ஒப்பந்தமானது அவரின் முன்னிலையில் கையெழுத்தானது.

News September 13, 2024

கிருஷ்ணகிரி வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

image

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

error: Content is protected !!