India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 117 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே<
கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 80க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி, ஜவளகிரி தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிகளில் சுற்றி வருகின்றன. இந்த காட்டு யானைகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து அனைத்தையும் ஒன்றிணைத்து மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதற்காக 50க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் வரும் 13.11.2024 அன்று பேச்சு போட்டி நடைபெற உள்ளது. காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை ஒட்டி இந்தப்போட்டி நடைபெற உள்ளது. ங்கேற்கும் மாணவ மாணவிகள் தங்கள் பள்ளி தலைமையாசிரியர் அவர்களின் கடிதத்துடன் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.பரிசுகளாக ரூபாய் 5,000,3,000,2,000 மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், மகளிர் உண்மை தொகை, மின்னிணைப்பு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 234 மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சரயு தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தகுதியற்ற மனுக்களுக்கு உரிய விளக்கம் கொடுக்குமாறு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற பெண்களுக்கான 30 நாட்கள் அழகு கலைப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தகுதியுடன் 18 முதல் 45வயது வரை உள்ள பெண்கள் நவ 1ஆம் தேதிக்குள் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரியை அடுத்த சின்னார் இடத்தில் இருசக்கர வாகனம் ஒன்று அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்ட சூளகிரி போலீசார் விபத்திற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். காலை நேரத்தில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பட்டது.
ஓசூர் அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக, கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சூளகிரி பகுதியில் தேடும் பணியில் நேற்று ஈடுப்பட்டனர். அப்போது ஏரி எப்பளம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் இதே பகுதியை சேர்ந்த முனியப்பன்(55) கஞ்சா செடியை பண்ணை கீரை வளர்ந்திருந்த பகுதியில் வளர்த்தது தெரிய வந்தது. போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில் 53 செடிகளை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாசன வசதி உள்ள விவசாயிகளின் நிலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிட தீவன சோளம் மற்றும் வேலிமசால் விதைகள் 100 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. பயன்பெற விரும்பும் விவசாயிகள் கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவரை அணுகி ஆதார் அட்டை, பசுந்தீவனம் பயிரிடப்பட உள்ள நிலத்திற்கான சிட்டா, அடங்கல் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா என போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஊத்தங்கரை, கந்திகுப்பம், பர்கூர், கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, ஓசூர், சூளகிரி, பாகலூர், பேரிகை, மத்திகிரி, நல்லூர், கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1,300 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கலை பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் நவ 17 ஆம் தேதி மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பரதநாட்டியம், ஓவியம் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெறுகின்றன. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் விவரங்களுக்கு சேலம் மண்டலக் கலைப்பண்பாட்டு மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.