Krishnagiri

News November 30, 2024

கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (30/11/2024) கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொல்லப்படுகின்றனர்.

News November 30, 2024

கிருஷ்ணகிரி அருகே மின்தடை அறிவிப்பு 

image

தேன்கனிக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (நவ. 30) காலை 9 மணியளவில் இருந்து மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை, நொகனூர், பென்னங்கூர், பேலூர், கோட்டை வாசல், அன்ன நகர், தேர்ப்பேட்டை, மாரசந்திரம், கம்மந்தூர், ஜர்க்கலாட்டி, முத்தூர், திப்பசந்திரம், கொடுகூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அரசிதழ் பதிவுபெற்ற அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் உள்ளிட்டோர் உள்ளனர்.

News November 29, 2024

ஊத்தங்கரை காவல் நிலையம் முன்பு பெண்கள் முற்றுகை

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக தங்களுக்கு வழங்க வேண்டிய பிஎஃப் பிடி பணம் வராததை கண்டித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில், அதற்கு காரணமான அங்கன்வாடி மேற்பார்வையாளர் ரூபா ரேகா மீது புகார் கொடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று 30க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்.

News November 29, 2024

கிருஷ்ணகிரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 

image

தமிழக முதல்வரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது.இதில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகையாக மாதம் ரூ.1000 வழக்கப்படும். இதில் பயன்பெறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை நவ.30 முதல் டிச.9 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிச.9ம் தேதிக்குள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

News November 29, 2024

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு 

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்த்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்கள் வருகிற 31ஆம் தேதிக்குள் https://awards.gov.in என்ற இணையதளம் வாயிலாக அவ்வையார் விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தகவல் அளித்துள்ளார்.

News November 29, 2024

கிருஷ்ணகிரியில் குவாரி டெண்டருக்கு தடை நீக்கம்

image

கிருஷ்ணகிரியில் ரூ.100 கோடி மதிப்பிலான குவாரி டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. டெண்டர் நடவடிக்கையை தொடரலாம் என்றும்,டெண்டர் ஒதுக்கீடு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு ஐகோர்ட் கட்டுப்பட்டது. வழக்கால் பாதிக்கப்படும் ஒப்பந்ததாரர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

News November 29, 2024

கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (30/11/2024) கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 28, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

கிருஷ்ணகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சூரிய ஒளி மின்சார திட்டத்தில் அதானி குழுமம் செய்ததாகக் கூறப்படும் ஊழல் குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதானியை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, இந்த ஊழல் தமிழக மின்சார வாரியத்தையும் பாதித்துள்ளதாக குற்றம் சாட்டினர். கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது.

News November 28, 2024

கிருஷ்ணகிரியில் மழை வெளுக்கும்

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ஆம் தேதி காலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக, வரும் 30ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!