India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து நிலை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பகுதி நேர சிறப்பாசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது செப்டம்பர் மாத சம்பளத்தை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். மாநில அரசு, சம்பளம் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இதில், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் சாலை விபத்துகளில் உயிர் இழந்த 4 பேரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் மதிப்பிலும், தண்ணீரில் மூழ்கி இறந்த 4 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் என முதல்அமைச்சரின் பொது நிவாரண உதவி தொகையில் இருந்து ரூ.17 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
சூளகிரி அருகே நேற்று மாலை சப்படி பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்றாக 3க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பாலும், கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 459 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 655 கன அடியானது. அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய் மூலம் பாசனத்திற்காக விநாடிக்கு 178 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து நாளை அ.தி.மு.க. சார்பில் காலை 10.30 மணிக்கு காவேரிப்பட்டணம் மற்றும் ஊத்தங்கரையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இதில், கட்சியின் இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் எம் எல் ஏ வுமான கே.அசோக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக கேபிஎம்.சதீஷ்குமார் என்பவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவர் அணி சார்பாக அதன் மாவட்ட செயலாளர் மருத்துவர் இளையராஜா மற்றும் ஊத்தங்கரை அதிமுக நிர்வாகிகள் காவேரிப்பட்டினத்தில் அவரது இல்லத்திற்கு சென்று இன்று அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் ஊத்தங்கரை, பா்கூா், கிருஷ்ணகிரி, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட 16 இடங்களில் குற்றத் தடுப்பு விழிப்புணா்வு கூட்டங்கள் நேற்று நடத்தப்பட்டன. காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை தலைமை வகித்து குற்றச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு குறித்து பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மி.மீ): போச்சம்பள்ளி – 93, நெடுங்கல் – 54.40, பெனுகொண்டாபுரம் – 51.30, பாரூர் – 51, கிருஷ்ணகிரி அணை – 33, கிருஷ்ணகிரி – 28.60, ராயக்கோட்டை – 27, ஊத்தங்கரை – 23.60, கெலவரப்பள்ளி அணை – 20, சூளகிரி – 21, சின்னாறு – 20, அஞ்செட்டி – 15.60, தளி – 15, பாம்பாறு அணை – 12, ஒசூர் – 10.10, தேன்கனிக்கோட்டை – 10 மி. மீ மழை பதிவாகியுள்ளது.
ஊத்தங்கரை வட்டத்தில் “உங்களைதேடிஉங்கள் ஊரில்” திட்டம் அக்.16 தேதி அன்று காலை 9.00 மணி முதல் மறுநாள் காலை 9.00 மணி வரை கள ஆய்வு மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
ஊத்தங்கரை வட்டத்தில், கல்லாவி, சாமல்பட்டி, ஊத்தங்கரை மற்றும் சிங்காரப்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் 08.10.2024 அன்று முன்கூட்டியே மனுக்கள் பெரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் அண்மையில் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து சீமானை நம்பி எனது இளமைகாலம் முழுவதும் வீணாகி பிழைக்க வழியில்லாமல் கடனாளியாகி விட்டேன் என கூறியிருந்தார். இந்நிலையில் ரூ.5 கோடி ரூபாயில் கரு.பிரபாகரன் வீடு கட்டியுள்ளார் என கட்சியினர் கூறி வந்ததையடுத்து தன்னுடைய வீட்டை படம்பிடித்து இதுதான் 5 கோடி வீடா என கேட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.