India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
அக்-19 அன்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது. கல்வித் தகுதி 8வது முதல் பட்டப் படிப்பு வரை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
–
இராணுவ மருத்துவப் படையில் பணிபுரியும் தேன்கனிக்கோட்டை சாலிவரம் கிராமத்தைச் சேர்ந்த பிரிகேடியர் ரவி முனிசாமி, ஹைதராபாத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மோகன் ஆகிய இருவரும் இந்தியா-இலங்கை நட்புறவை மேம்படுத்த வலியுறுத்தி பெங்களூரிலிருந்து 1,500 கி.மீட்டர் மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒசூரில் ஐஎன்டியுசி நிர்வாகிகள் சார்பில் தேசிய செயலாளர் மனோகரன் வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்ட் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரியில் பல்வேறு இடங்களில் சிறப்பாக ஆயுதபூஜை நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகள்,வணிக தொழிற்சாலைகள், வணிக அலுவலகங்கள்,வாகனம் அலுவலகங்கள், வாகனங்களுக்கு ஆயுதபூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட பிரஸ் கிளப்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம் மூத்த பத்திரிக்கையாளர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், அனைத்து பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் முன்பு தருமபுரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இது முற்காலத்தில் எயில் நாடு எனவும், ஓசூர் முரசு நாடு எனவும், ஊத்தங்கரை கோவூர் நாடு என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் “நவகண்டம்” எனப்படும் நடுகற்கள் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. இங்கு உள்ள “பாரா மகால்” என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது
கிருஷ்ணகிரி கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள கே.எம்.எஸ். மருத்துவமனை ஆட்டோ ஸ்டாண்டில் 2ஆம் ஆண்டு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் சிவக்குமார், கௌரவத் தலைவர் சந்தோஷ், செயலாளர் ராமன், துணைச் செயலாளர் ஹரிஹரன், பொருளாளர் சீனிவாசன் மற்றும் ஸ்டாண்ட் தலைவர் வேலு செயலாளர் விஜய் பொருளாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில், ஓட்டுனர்களுக்கு சீருடை மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் ஓசூர் தர்மபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஓசூர் வழியாக தமிழக அரசுக்கு வரி செலுத்தாமலும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்தும் இயக்கப்பட்ட 18 வெளிமாநில ஆம்னி பேருந்துகளை வாகன தணிக்கையில் ஈடுபட்டு பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட உள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் (32). இவர் கடந்த 2 மாதங்களாக கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே வெங்கடேஷ்புரம் அருகே உள்ள பெக்கிலி கிராமத்தில் உள்ள மூர்த்தி என்பவரது கிரஷரில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். நேற்று காலை பணிக்கு செல்ல வெளியில் படுத்திருந்த அசோக்கை எழுப்பினர். அவர் இறந்து கிடந்தார்.பேரிகை போலீசார் விசாரணை.
பர்கூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணை தலைவர் சேகர் தலைமையில் நடைப்பெற்ற பாதயாத்திரைக்கு பர்கூர் நகர தலைவர் யுவராஜ் வரவேற்புரை ஆற்றினார்,அசோகன், ஜெயபிரகாஷ், அகில இந்திய உறுப்பினர் ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மல்லப்பாடி கூட்டுரோடு அருகில் இருந்து துவங்கிய இந்த பாதையாத்திரையை கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே, வெளியே செல்வோர் குடை அல்லது ரெயின் கோர்ட்டுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.