India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் இன்று(டிசம்பர் 4) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இழப்பீடு கோரும் விவசாயிகள் அவரவர் சம்பந்தப்பட்ட வேளாண்மை அலுவலரை சந்தித்து இழப்பீடு குறித்து மனு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல சேவை வழங்குவதில் தமிழ்நாடு அளவில் 93.62% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து தேசிய சுகாதார அமைப்பின் சான்றிதழை பெற்று சாதனை படைத்துள்ளது .தமிழகத்தில் குழந்தைகள் நல சேவை வழங்குவதில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதலிடம் பெற்றதற்கு, மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு பாராட்டினார்.
கிருஷ்ணகிரி அதிமுக முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடாசலம் வீட்டின் நேற்று(டிச 4) இரவு கருமலையிலிருந்து ராட்சத பாறை சரிந்து வீட்டின் மேல் விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த அசம்பவிதமும் நடைபெறவில்லை. இதனை அறிந்த வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த போட்ட கனமழையால் சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள். அதன்படி 26 குடிசை, ஒட்டு வீடுகள் முழுமையாகவும், 127 வீடுகள் சேதம் என மொத்தம் 153 வீடுகள் சேதமாகியுள்ளது. மேலும், இது தவிர 31 ஆடு, மாடுகள், கோழிப்பண்ணைகளில் இருந்த 15 ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ளது. மேலும் பல ஆடு, மாடுகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெவித்தனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் 5-ஆம் தேதி துணை முதல்வர் வருவதாக இருந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு அலுவலா்கள் தெரிவித்தனா்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புளியம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த மக்களை எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் சந்திக்கவில்லை என ஆதங்கம் கொண்ட புளியம்பட்டி ஊராட்சி தலைவர் ரங்கநாதன் போச்சம்பள்ளி பகுதியை பார்வையிட வந்த அமைச்சர் முத்துசாமியை இந்திராபுரி கிராமத்தில் வழியில் நிறுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அமைச்சர் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 1077, மற்றும் 04343-234 444 என்ற எண்களிலும், கிருஷ்ணகிரி வட்டார மக்கள் 04343 – 236050,பா்கூா் 04343 – 266164, ஊத்தங்கரை 04341 – 220028, போச்சம்பள்ளி 04341 – 252370,சூளகிரி 04344 – 292098, 252998,ஒசூா் 04344-222493,தேன்கனிக்கோட்டை 04347- 235041 அஞ்செட்டி 04347- 236411 என்ற எண்களில் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் வடதமிழகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டாரங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. சாலைகள், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கவும் வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க
ஊத்தங்கரையில் பகுதியில் வரலாறு காணாத வகையில் பெய்த பலத்த மழையால், பலத்த பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை, இன்று டிசம்பர் 02, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாவைச் சேர்ந்த பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 03) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊந்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி தாலுகாவைச் சேர்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.