India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை 9 மணி மேடுஹல் 5 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளது. மின்தடை செய்யப்படும் இடங்கள், பேகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், மகாலட்சுமி லேஅவுட், நல்லூர், பாகூர், கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டபாலி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பாக நாளை கிருஷ்ணகிரி தனியார் கே ஆர் சி மஹாலில் கழக வளர்ச்சி குறித்தும் தகவல் தொழில்நுட்ப பிரிவு வளர்ச்சி குறித்தும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மாவட்டத்திலுள்ள கழக ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் அதிக அளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட இன்று (06) சசிகலா வருகை தர இருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் இன்று வருகை தர இருந்த நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் திமுக நிர்வாகிகளின் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக வேளாண்துறை அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம், புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் மழையால் 3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி பயிர்கள் நீரால் சூழ்ந்துள்ளதாகவும் கணக்கெடுப்பு பணிகள் முடிவில் நிவாரணம் குறித்து முதல்வர் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாபு (38) இவரது மனைவி சுதாவுக்கும், வெங்கடாஜலபதி என்பவருக்கும் இருந்துவந்த தகாத உறவை பாபு கண்டித்துள்ளார். இருவரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பாபுவை 2013ல் கொன்றனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுதா(41),வெங்கடாஜலபதி (45),முனியப்பன் (45) ஆகிய மூவருக்கும் ஓசூர் நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மலையாண்டள்ளி ஊராட்சி வேங்கை நகரில் மாவட்ட ஆட்சியர் சரயு குடிநீரில் உள்ள குளோரின் அளவை ஆய்வு செய்தார். அப்போது குடிநீரில் குளோரின் அளவு குறித்து முறையாக பதிலளிக்காத ஊராட்சி செயலாளர் சின்னசாமி என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உடன் அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் கடலூர், தி.மலை மற்றும் தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் சிறு வணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நாளை முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிறு வணிகர்களுக்கு உதவிக்கரம் நீட்டவே இந்த முகாம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய வட்டாரங்களில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்கள் 05.12.2024 முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார். ஊத்தங்கரை வட்டத்தில் காமராஜ் நகர், அண்ணா நகர், நேரு நகர், கொல்லப்பட்டி, ஜீவா நகர், சிங்காரப்பேட்டை எம்.ஜி.ஆர். நகர், திருவனப்பட்டி, கல்லாவி மற்றும் கெங்கிநாயக்கன்பட்டி ஆகிய 9 இடங்களில் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் பெஞ்சல் புயல் மழை காரணமாக கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெள்ளம் பாதித்த 15 மாவட்ட கல்வி அலுவர்களுடன் நேற்று ஆலோசனை செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் அரையாண்டு தேர்வு எழுத முடியாத சூழல் இருந்தால், அந்த தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.