India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலை முதல் கன மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு உத்தரவு பிறப்பித்துள்ளார் குழந்தைகள் வீட்டில் பத்திரமாக இருக்க அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளார் மற்றும் அவசர உதவி எண் பேரிடர் கால எண்களை கொடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் மாவட்ட ஆட்சியர்கே.எம்.சரயு அவசர கால 24 மணிநேரம் செயல்படக்கூடிய தொலைபேசி எண்களை மக்களின் பயன்பாட்டிற்காக அறிவித்துள்ளார்.இந்த எண்களின் அழைப்பு மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் எனவும் அறிக்கை விடப்பட்டுள்ளது.எண்கள் 1077 மற்றும் 04343-234444.இயற்கை பேரிடர்கள் தொடர்பான புகார்களை இந்த எண்களில் தெரிவிக்கலாம்.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தகவல். மேலும் மாவட்டத்தில் உள்ள பெரியமுத்தூர், திம்மாபுரம், பெண்ணேஸ்வரமடம், தளிஹள்ளி உள்ளிட்ட 8 கிராமங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கனமழைக் கான மஞ்சள் அலர்ட் விடுத்து சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் மழைக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கிருஷ்ணகிரியில் 64.5மில்லி மீட்டர் முதல்115.5 மில்லி மீட்டர் வரையிலான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (அக்.15) அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சராயு அறிவித்துள்ளார். மாணவ, மாணவிகள் அனைவரும் பாத்திரமாக வீட்டுக்கு சென்றுள்ளதை, ஆசிரிய பெருமக்கள் உறுதி செய்யவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவின் 53வது தொடக்க விழா அக்.17ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி தொண்டர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், அவர்கள் சார்ந்த பகுதிகளில் அதிமுக கொடியை ஏற்றி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகள், உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிருஷ்ணகிரியில் வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தகவல் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னார் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 46 இலட்சம் மதிப்பில் சின்னபேடப்பள்ளி, பெரியபேடப்பள்ளி, சின்னமட்டமனுர் வரை தார்சாலை பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் கே. எம். சரயு முன்னிலையில் நேற்று துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி ,தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளனர். கழக முன்னோடிகள் இதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் மதியழகன் அறிக்கை வெளிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து செல்கின்றனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் மளிகை, பெட்டிக்கடைகளில் குட்கா விற்றதாக 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஓசூர் டவுன், அஞ்செட்டி பகுதிகளில் கஞ்சா விற்றதாக 7 பேர் மற்றும் லாட்டரி சீட்டு விற்ற 8 பேருடன் பணம் வைத்து சூதாடியதாக 6 பேரை கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.