India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமையன்று அணையில் விநாடிக்கு 1,079 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று(அக்20) காலை விநாடிக்கு 1,206 கன அடியாக அதிகரித்தது.எனவே, அணையிலிருந்து தென்பெண்ணை ஆறு மற்றும் கால்வாயில் 1,206 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியில் தற்போது அணை நீர்மட்டம் 41.98 அடியாக உள்ளது.
பாகலூர் ஜீவாநகரில் செல்போன் டவரில் இருந்த காப்பர் கம்பிகளை சிறுவன் ஒருவன் திருடிக் கொண்டிருந்தான். அப்போது, அபாய ஒலி சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திற்கு ஒலித்துள்ளது. எனவே அவர்கள் பாகலூர் பகுதியில் உள்ள பாதுகாப்பு அலுவலர் முருகனுக்கும், பாகலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கர்நாடக மாநில சிறுவனை பிடித்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20/10/2024 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20/10/2024 பெய்த மழை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி பேரூர் 19.8மி.மீ, தென்கனிக்கோட்டை 13.0 மி.மீ, ஓசூர் 24.6 மி.மீ, ஊத்தங்கரை 39.0 மி.மீ, பம்பர் டேம் 60.0 மி.மீ, பேணு காண்டபுரம், 8.4 மி.மீ, கெலவரபள்ளி டேம் 10.0 மி. மீ, ராயக்கோட்டை 7.0 மி.மீ, நெடுங்கல் 12.0 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக மாவட்டத்தில் 13.39 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத், பர்கூர் எம்.எல்.ஏ. தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில் 423 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த வரதராஜ பெருமாள் (28) என்பவர் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் காவல் நிலைய கோட்பட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபத்துக்குள்ளானதில் மூளை சாவு அடைந்தார். அதனை அடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசு அலுவலர்கள், காவலர்கள் இறுதி அஞ்சலி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 1ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர்கள் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இசிஇ ஆகிய பொறியியல் பிரிவில் டிப்ளமா, பொறியியல் அல்லாத பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் என 499 பேருக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர www.boat-srp என்ற இணையதளத்தில் அக்.21க்குள் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13.09.2024 முதல் நடைபெற்று வரும் 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் நிறைவு விழா 21.10.2024 திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் சிறந்த முறையில் அரங்கம் அமைத்த அரசுத்துறை அலுவலர்களுக்கும் சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் 195.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், தேன்கனிக்கோட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி, பெனுகொண்டபுரம், போச்சம்பள்ளி, ராயக்கோட்டை மற்றும் ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதில் பாரூர் பகுதியில் அதிகபட்சமாக 34.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.