Krishnagiri

News December 10, 2024

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலினாலும், மழை வெள்ளத்தாலும் 10, 11,12 -ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் இம்மாவட்டத்தில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் / மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.

News December 10, 2024

ஒசூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், பேகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் பள்ளி வகுப்பறைகள் பழுது மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., இன்று 10.12.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.

News December 10, 2024

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் புதியதாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் (Govt ITI) தோற்றுவிக்கப்பட்டு மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கள், ஏரோநாட்டிக்ஸ் ஸ்டார்க் & எக்யூப்மென்ட் பிட்டர், ஏர்கண்டிஷனிங் டெக்னீஷியன், இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் & டிஜிட்டல் மேனுஃபேக்சரி உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை 31.12.2024 வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு தெரிவித்துள்ளார்.

News December 10, 2024

மூதறிஞர் ராஜாஜி பிறந்தநாள் விழா ஆட்சியர் மரியாதை

image

மூதறிஞர் ராஜாஜியின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு ஓசூர் வட்டம் மத்திகிரி அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம் சரயு கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News December 10, 2024

மாவட்ட காவல்துறை சார்பில் பொது ஏல அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த 93 இருசக்கரம் மற்றும் 54 நான்கு சக்கர வாகனங்கள் கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை உத்தரவுப்படி டிச 17ஆம் தேதி காலை 10 மணியளவில், ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் கோரும் நபர்கள் இன்று முதல் வாகனங்களை பார்வையிட்டு டோக்கன் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

சூளகிரி அருகே ஒற்றை காட்டு யானை முகாம்

image

சூளகிரி தாலுகா ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது. சூளகிரி வனப்பகுதி கிராமங்களான குண்டகுறுக்கி, எலசேப்பள்ளி, கானலெட்டி, கொரகுறுக்கி, செட்டிப்பள்ளி, அங்கொண்டப்பள்ளி, கொட்டாங்கிரி பாப்பனப்பள்ளி, பட்டாகுருப்பரப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமத்தில் உள்ள மக்கள் இரவு நேரத்தில் விவசாய காவலுக்கு செல்ல வேண்டாம் என இன்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

News December 9, 2024

கிருஷ்ணகிரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப. தலைமையில் இன்று (09.12.2024) நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளும் உள்ளனர்.

News December 9, 2024

இந்து சமய உதவி ஆணையரிடம் இந்து முன்னணியினர் மனு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழைமையான ஆலயங்களில் உள்ள கடவுள் விக்கிரகங்கள், நிலங்கள், பொக்கிஷங்களை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள திருக்கோவில்களை ஆவணப்படுத்த வேண்டும் என இந்து முன்னணி கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் நேற்று மனு வழங்கினர்.

News December 9, 2024

 கபீர்புரஸ்கார் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் 

image

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கபீர் புரஸ்கார் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மூலம் டிச 15 ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம்.

News December 9, 2024

ஓசூரில் விரைவில் தொடங்கும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம்

image

ஓசூர் மாநகரில் 4 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் 2 ஆம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், ரூ.8 ஆயிரம் கோடி–யில், விடுபட்ட பகுதிகளுக்கும், இன்னும் 25 ஆண்டுகளுக்கு பிறகு இருக்கப்போகும் மக்கள் தொகை போன்றவற்றை கணக்கிட்டும் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை அடுத்து வரும் மாதங்களில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!