Krishnagiri

News January 21, 2025

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் டேம் ரோடு பகுதியில் நேற்று ஜனவரி 20ஆம் அதிகாலை, பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பேருந்து கால்வாயில் சாயாமல் நிறுத்தப்பட்டது. பேருந்தில் பயணத்தை 60 பயணிகளும், காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

News January 20, 2025

கிருஷ்ணகிரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

News January 20, 2025

பாலக்கோடு அருகே வாகன விபத்தில் ஒருவர் பலி

image

பாலக்கோடு அருகே கும்மனூர் அடுத்த நாகனூரை சேர்ந்தவர் சேட்டு (38). கட்டிட மேஸ்திரி. இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வந்தார் சென்றபோது எதிரே வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த சேட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

News January 20, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்னிறுத்தம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கெம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கெம்பட்டி, பேளகொண்டபள்ளி, மதகொண்டபள்ளி, முத்தூர், கப்பக்கல், பாரந்தூர், கோபனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.

News January 19, 2025

2ஆம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரி,ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. ஆகிய அணைகளில் இருந்து 2ஆம் போக சாகுபடிக்கு கடந்த பல நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து போச்சம்பள்ளி காவேரிப்பட்டினம், பெரியமுத்தூர்,அவதானப்பட்டி,பாரூர், அரசம்பட்டி,பண்ணந்தூர், புலியூர் பகுதிகளில் 2ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

News January 18, 2025

பொங்கல் முடிந்து ஊர் திரும்பும் பயணிகள்: கட்டுக்கடுங்காத கூட்டம்

image

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்று, வரும் மக்களுக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. கடந்த 11-ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், நேற்று(ஜன.17) பண்டிகை முடிந்து திரும்பி சென்றபடியாக செல்கின்றனர். இருப்பினும் சேலத்திலிருந்து பெங்களூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறம்பி வழிவதால் நின்றுக்கொண்டே செல்கின்றனர்.

News January 18, 2025

அம்மனேரி எருதுவிடும் விழா – LIVE

image

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் விழா தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் அம்மனேரியில் எருது விடும் விழா இன்று(ஜன 18) நடைபெற்று வருகிறது. அதை way2news-இல்<> நேரலையில்<<>> காணுங்கள் .

News January 18, 2025

தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

image

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாராயணசாமியின் 100வது பிறந்தநாளை கொண்டாடுவது குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் இராமகவுண்டர் கலந்துக் கொண்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

News January 18, 2025

KRP அணையில் அலைமோதிய கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக விளங்கும் KRP அணையில் தைத்திருநாளை முன்னிட்டு அனைத்து பள்ளிக்கூடங்களும் அரசு அலுவலகங்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கேஆர்பி அணைக்கு, நாள் பொழுதைக் கழிக்க குடும்பத்துடன் வந்திருந்தனர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ஜாலியாக பூங்கா மற்றும் மான், முயல் ஆகிவற்றை கண்டு ரசித்தனர். வெயில் நேரங்களில் குளித்து மகிழ்ந்தனர்.

News January 17, 2025

21ம் தேதி முதல் 3 நாள் ஒகேனக்கல் குடிநீர் சப்ளை நிறுத்தம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 21ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் சப்ளை இருக்காது என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். பாலக்கோடு அருகில் உள்ள பிரதான குடிநீர் குழாயை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, வரும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஒகேனக்கல் குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!