India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையின் குருக்கே கழுதை வந்ததால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த விசுவாசம்பட்டி சார்ந்த குப்பன் (55) மற்றும் கோவிந்தசாமி (80) இருவரும் அதன் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் கோவிந்தசாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, பகுதியை சேர்த்தவர் பிரித்வி, (21) மர்மநபர் ஒருவர் உங்களுக்கு பொதுப்பணித் துறையில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி, 6.25 லட்சம் ரூபாயை இவரிடம் வாங்கி, சில நாட்களுக்கு முன், போலியான பணி நியமன உத்தரவை வழங்கியுள்ளார். அதை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றபோது தான், இது போலி என தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (01.02.2025) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சி.தினேஷ்குமார்., இ.ஆ.ப சந்தித்து வாழ்த்து பெற்றார். இவர் விரைவில் கிருஷ்ணகிரி ஆட்சித்தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாலைப் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறன் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், மாகிட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) குமாள், சார் ஆட்சியர் பிரியங்கா இஆப., உள்ளிட்ட பலர் உள்ளனர்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 56-வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி அதிமுக சார்பில் பிப்ரவரி 3-ம் தேதி அந்தந்த பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் அதிமுக எம்எல்ஏ கே. அசோக் குமார் அவர்கள். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை இந்து முன்னணி சார்பாக திருப்பரங்குன்றம் மலைக்கு ஆதரவாக இந்து முன்னணி நடத்தும் மாபெரும் போராட்டத்திற்கு, ஜெர்மனி கோட்டை பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டிய இந்து முன்னணி நிர்வாகிகள் 10 பேரை தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இப்பணியை டி.மதியழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர், ரூ.39.60 லட்சம் மதிப்பிடத்தில் புதிய அரசு துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. அஞ்சூர் ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது. ஷேர் செய்யவும்..
வேப்பனஹள்ளி அடுத்த ஐ.பி கானப்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீகோபால் கடந்த 2024ம் ஆண்டு 17 வயது சிறுமியை கடத்திசென்று திருமணம் செய்துவிட்டு பின் தலைமறைவானார். சமீபத்தில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது, சிறுமி ஏழு மாத கர்ப்பமாக இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி மத்திய (வேப்பனஹள்ளி) மாவட்ட செயலாளராக G.சுரேஷ், இணை செயலாளராக முகுந்த் R.பாண்டியன், பொருளாளராக M.முருகேசன், துணை செயலாளராக P.இளையப்பன், D.மகேந்திரன் உள்ளிட்டவர்களும், கிழக்கு மாவட்ட செயலாளராக E.முரளிதரன், இணை செயலாளராக R.தாமோதரன், பொருளாளராக R.மணிகண்டன், துணை செயலாளராக R.சிவசங்கரன், J.ஜெகதீஸ்வரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஷேர் செய்யவும்..
தமிழக அரசு இன்று (ஜன.31) பல மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த சரயு-வை மாற்றம் செய்து, அவருக்கு பதில் தினேஷ் குமார் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
Sorry, no posts matched your criteria.