India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து ஓசூரில் காந்தி சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன், மூத்த காங்கிரஸ் நிர்வாகி மைஜா அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆர்டிஐ மாவட்ட பொறுப்பாளர் அசேன், மாநகர பொதுச்செயலாளர் இர்ஷாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. கடந்த 2ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் காரணமாக பெரு மழை வெள்ளம் ஏற்பட்டு, காவல் நிலையம், வங்கி உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது. இதில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெரும்பாலான ஆவணங்கள் தண்ணீரில் நனைந்தன. தற்போது ஆவணங்களை வெயிலில் காய வைக்கும் பணியில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலினாலும், மழை வெள்ளத்தாலும் 10, 11,12 -ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் இம்மாவட்டத்தில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் / மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், பேகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் பள்ளி வகுப்பறைகள் பழுது மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., இன்று 10.12.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் புதியதாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் (Govt ITI) தோற்றுவிக்கப்பட்டு மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கள், ஏரோநாட்டிக்ஸ் ஸ்டார்க் & எக்யூப்மென்ட் பிட்டர், ஏர்கண்டிஷனிங் டெக்னீஷியன், இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் & டிஜிட்டல் மேனுஃபேக்சரி உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை 31.12.2024 வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு தெரிவித்துள்ளார்.
மூதறிஞர் ராஜாஜியின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு ஓசூர் வட்டம் மத்திகிரி அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம் சரயு கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த 93 இருசக்கரம் மற்றும் 54 நான்கு சக்கர வாகனங்கள் கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை உத்தரவுப்படி டிச 17ஆம் தேதி காலை 10 மணியளவில், ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் கோரும் நபர்கள் இன்று முதல் வாகனங்களை பார்வையிட்டு டோக்கன் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூளகிரி தாலுகா ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது. சூளகிரி வனப்பகுதி கிராமங்களான குண்டகுறுக்கி, எலசேப்பள்ளி, கானலெட்டி, கொரகுறுக்கி, செட்டிப்பள்ளி, அங்கொண்டப்பள்ளி, கொட்டாங்கிரி பாப்பனப்பள்ளி, பட்டாகுருப்பரப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமத்தில் உள்ள மக்கள் இரவு நேரத்தில் விவசாய காவலுக்கு செல்ல வேண்டாம் என இன்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப. தலைமையில் இன்று (09.12.2024) நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளும் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழைமையான ஆலயங்களில் உள்ள கடவுள் விக்கிரகங்கள், நிலங்கள், பொக்கிஷங்களை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள திருக்கோவில்களை ஆவணப்படுத்த வேண்டும் என இந்து முன்னணி கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் நேற்று மனு வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.