India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <
உத்தனப்பள்ளி அருகே கொமேப்பள்ளியை சேர்ந்த்சவ்ஸ்ர் ராஜேஷ் நாதேஸ்வர கலைஞர், இவருக்கும் மதுரையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதற்கிடையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, அந்த பெண் இவரிடம் பேசுவதை நிறுத்தவே, மனம் உடைந்த ராஜேஷ் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில், 20க்கும் மேற்பட்ட யானைகள், 3 குழுக்களாக முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து, 3 குழுக்களாக, 20க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறி, பாவாடரப்பட்டி கிராம விவசாய நிலங்களுக்குள் புகுந்து, ஒரு ஏக்கர் நெல் பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ச.தினேஷ் குமார் 2017ல் ஐஏஎஸ் முடித்து, மத்திய நிதி அமைச்சகம், தேனி, சிவகாசி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களில் பணியாற்றினார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14வது கலெக்டராக பொறுப்பேற்றார். அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அலுவலகம் வருகையின் போது, நுழைவாயிலில் படிக்கட்டை தொட்டு வணங்கி உள்ளே சென்றார்.
போச்சம்பள்ளி அருகே பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக 3 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு பள்ளியில் 8 வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம் , பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.தற்போது பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.<
ஒசூா், சானசந்திரம், வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் மனோகா் (எலக்ட்ரீசியன்) கொலை வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பரான ஹரிஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மனோகரும், ஹரிஸும் இருசக்கர வாகனத்தில் கசவகட்டாவுக்குச் சென்று மது அறுந்துபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஹரிஷ் கட்டையால் மனோகரைத் தாக்கியத்தில் மனோகா் உயிரிழந்தாா் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட புத்தக பேரவை மற்றும் அரசு அருங்காட்சியகம் இணைந்து நடத்தும தொல்லியல் பயிற்சி கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக வளாகத்தில் பிப்ரவரி 8, 9 தேதிகளில் நடைபெறுகிறது. ஓய்வு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு 80723 51338, 97875 36970 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
ஓசூர் அருகே சானசந்திரம் வ. உ. சி நகரை சேர்ந்த மனோகர் (25) எலக்ட்ரீசியன், நேற்று மாலை ஓசூர் கசவு கட்டா பகுதி மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே, தலையில் பலத்த காயத்துடன் இறந்துகிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேனிகனிக்கோட்டை பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகளால் உயிரிழப்பு மற்றும் விவசாய பயிர்கள் சேதம் ஏற்படுகிறது. இதனை கண்டுக் கொள்ளாத தமிழக அரசை கண்டித்து இன்று தேன்கனிக்கோட்டை காவல் நிலையம் அருகில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.